News October 21, 2025
கேதார கௌரி விரதம் இருப்பது எப்படி?

நல்ல கணவன் கிடைக்கவும், கணவரின் நலம் வேண்டியும் பெண்கள் கேதார கெளரி விரதம் மேற்கொள்வார்கள். 21 நாள்கள் மேற்கொள்ளப்படும் விரதம் தற்போது, ஒருநாள் விரதமாகிவிட்டது. காலையில் குளித்து, கலசத்தில் நூலால் 21 முடிச்சுகளை அமைத்து, சிவன் பார்வதியை வழிபடணும். 21 எண்ணிக்கையில் பாக்கு, வெற்றிலை, பூஜை பொருள்கள் படைத்து வழிபடலாம். விரதம் முடிந்து கயிற்றை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டலாம்.
Similar News
News October 21, 2025
அதிமுக கூட்டணியில் இணையப்போகிறதா விசிக?

அதிமுக அழியக்கூடாது என்று திருமா தொடர்ச்சியாக அட்வைஸ் செய்வது கூட்டணி கணக்குக்காக அல்ல என MP ரவிக்குமார் கூறியுள்ளார். அதிமுகவை அழித்துவிட்டு அவ்விடத்தை பாஜக பிடிக்க நினைப்பதாகவும், இந்த சதித்திட்டத்துக்கு அதிமுக ஆளாகிறதே என்ற ஆதங்கத்தில்தான் அப்படி சொல்வதாகவும் கூறினார். மேலும், EPS-க்கு சமூகநீதி மீது எந்த பற்றும் இல்லை என்ற அவர், அதிமுக என்ன ஆஃபர் கொடுத்தாலும், அங்குபோக வாய்ப்பே இல்லை என்றார்.
News October 21, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹2,080 உயர்ந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக்.21) ஒரே நாளில் சவரனுக்கு ₹2,080 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராமுக்கு ₹260 உயர்ந்து ₹12,180-க்கும், சவரன் ₹97,440-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில நாள்களில் சவரனுக்கு ₹2,240 குறைந்திருந்த நிலையில், <<18060775>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருவதால், இந்தியாவிலும் அதன் தாக்கம் மீண்டும் எதிரொலித்துள்ளது.
News October 21, 2025
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில், குமரி, நாகை, ராமநாதபுரம், கடலூர் மாவட்ட மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மீன் பிடிக்க சென்றவர்களும் விரைவில் கரை திரும்ப வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மீன்வளத் துறையினர், போலீஸார் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பும் செய்கின்றனர்.