News April 11, 2024

ரோஸ் சர்பத் செய்வது எப்படி?

image

வெயில் காலத்தில் ஏற்படும் மூலச்சூடு, மலச்சிக்கல், குடலில் புண் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் ஆற்றல் ரோஜாப்பூவுக்கு உண்டு. மேனியை மின்ன வைக்கும் ரோஸ் சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம். பன்னீர் ரோஜா இதழ்கள், முந்திரி, ஏலக்காய், இளம் தேங்காய் துண்டுகள், தேன் ஆகியவற்றை கூழ் போல அரைக்கவும். பின்னர் அதனை வடிக்கட்டி சாறாக எடுத்து, அதில் நட்ஸ் & சப்ஜா விதை சேர்த்தால் சுவையான சர்பத் ரெடி.

Similar News

News November 13, 2025

ஒரு கவுன்சிலர் கூட இல்லாத தவெக, திமுகவிற்கு போட்டியா?

image

ஆதவ் அர்ஜுனா பணத்தை வைத்து ஆட்சியை பிடித்துவிடலாம் என நினைப்பதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். ஒரு கவுன்சிலர் கூட இல்லாத தவெக, 2026 தேர்தலில் திமுக vs தவெக இடையேதான் போட்டி என கூறுவது விந்தையிலும் விந்தை என்றும் அவர் கூறியுள்ளார். தேர்தலின் போது கூட்டத்தை யார் வேண்டுமானாலும் கூட்டிவிடலாம், ஆட்சிக்கு வர வேண்டும், மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

News November 13, 2025

பிஹார் தேர்தல்: ஆட்டம் காண போகும் பங்குச்சந்தைகள்

image

பிஹார் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. இந்த முடிவுகள் இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். பிஹாரில் NDA கூட்டணி தோற்றால், மத்தியில் புதிய கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த அரசியல் தடுமாற்றத்தால், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி போன்ற முக்கிய குறியீடுகள் 5 முதல் 7% வரை குறுகிய கால சரிவை சந்திக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

News November 13, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 518 ▶குறள்: வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல். ▶பொருள்: ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈ.டுபடுத்த வேண்டும்.

error: Content is protected !!