News March 20, 2024
செம்பருத்திப்பூ சர்பத் செய்வது எப்படி?

இதய படபடப்பு, ரத்தக்குழாய் அடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய ஆற்றல் கொண்டது செம்பருத்திப்பூ. எளிதாக கிடைக்கும் செம்பருத்திப்பூவை வைத்து உடலுக்கு குளிர்ச்சியை தரும் சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம். ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை, இஞ்சி, புதினா இலைகளை போட்டு, கரண்டியால் லேசாக நசுக்கிக் கொள்ளவும். பின்னர் அதில் செம்பருத்திப்பூ ஜூஸை ஊற்றி, சப்ஜா விதை சேர்த்தால் சுவையான சர்பத் ரெடி.
Similar News
News March 17, 2026
அதிக நேரம் ரம்ஜான் நோன்பு இருப்பவர்கள் யார் தெரியுமா?

ரம்ஜான் மாதத்தில் அதிகாலை முதல் மாலை வரை உண்ணாமல், நீர் அருந்தாமல் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். சூரிய உதயம், மறைவை பொறுத்து ஒவ்வொரு நாட்டிலும் நோன்பு நேரம் மாறுபடுகிறது. கிரீன்லாந்து, ஐஸ்லாந்து நாட்டு மக்கள் ஒருநாளில் 16 மணி 30 நிமிடங்கள் நோன்பு இருக்கிறார்களாம். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் 13 மணி 45 நிமிடங்கள் நோன்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
News March 17, 2026
திமுக கூட்டணியில் தொடரும் இழுபறி

திமுக – சிபிஎம் இடையில் இன்று நடைபெற்ற 3-ம் கட்ட தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை. இதுகுறித்து பேசிய பெ.சண்முகம், கடந்த தேர்தலை ( 6 தொகுதிகள்) விட, கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக கூறினார். மேலும், திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்திருப்பதால், பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை; விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்றார்.
News March 17, 2026
வீட்டில் தங்க நகை இருக்குதா.. எச்சரிக்கை

TN-ல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால், வீட்டில் அதிகளவில் தங்கம் வைத்திருந்தால் சிக்கல் எழுமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். வருமான வரி விதிப்படி, திருமணமான பெண்கள் 500 கிராம், திருமணம் ஆகாத பெண்கள் 250 கிராம், ஆண்கள் 100 கிராம் வரை ஆவணங்களின்றி தங்கத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம். இந்த அளவுக்கு மேல் வீட்டில் தங்கம் வைத்திருந்தால், ரெய்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும்.


