News August 25, 2024
மீன் பஜ்ஜி செய்வது எப்படி?

முள் நீக்கிய மீன் துண்டுகளை மஞ்சள் போட்டு சுத்தமாக அலசி, நீர் வடிய நன்றாக பிழிந்துகொள்ளவும். அவற்றின் மீது மிளகு, வெங்காயம், இஞ்சி, பூண்டு, உப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்த மசாலா விழுதை தடவி, ஊற வைக்கவும். கெட்டியான பதத்தில் உள்ள அதனை பஜ்ஜி மாவில் தோய்த்து எடுத்துக்கொள்ளவும். அதன் பின் எண்ணெய்யில் பொறித்து எடுத்தால் சுவையான மீன் பஜ்ஜி ரெடி. இதனை மல்லி சட்னியில் தொட்டு சாப்பிடலாம்.
Similar News
News December 9, 2025
திருப்பரங்குன்றம் விவகாரம்: இன்று விசாரணை

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. தனி நீதிபதி G.R.சுவாமிநாதன் அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற கோர்ட் உத்தரவிட்டும் ஏற்றாததால், அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 9, 2025
அண்ணாமலையை ரகசியமாக சந்தித்தார்.. புதிய திருப்பம்

கோவையில் உள்ள தனது இல்லத்தில் TTV தினகரனுக்கு அண்ணாமலை நேற்று இரவு விருந்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, இருவரும் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. விருந்தின் நடுவே டெல்லியில் இருந்து போன் வந்ததால், அண்ணாமலை உடனடியாக புறப்பட்டு சென்றுள்ளாராம். டிடிவி கூட்டணி ஆப்சனை ஓப்பனாக வைத்திருக்கும் நிலையில், அண்ணாமலை உடனான சந்திப்பு சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
News December 9, 2025
55,000 பேருக்கு புதிய ரேஷன் கார்டு

ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அடுத்த மாதம் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், புதிய கார்டு கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களில் 1.07 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் தகுதியான 55,000 பேருக்கு ஒரு சில நாள்களிலும், மற்றவர்களுக்கு இம்மாத இறுதிக்குள்ளும் கார்டுகள் வழங்க உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.


