News April 5, 2025
ஏசியை பராமரிப்பது எப்படி?

*ஏர் ஃபில்டர்களை எப்போது சுத்தமாக பராமரிக்கவும். இதனால் காற்று உறிஞ்சப்படுவது எளிதாகும். *வெளியில் இருக்கும் விண்டோ யூனிட் சற்றே குனிந்த நிலையில் இருந்தால், கண்டன்சேஷன் தண்ணீர் எளிதாக வெளியாகும் *மின்சார லோட் தாங்காத எக்ஸ்டென்ஷன் கார்டை பயன்படுத்தவே கூடாது *இடி இடிக்கும் போது ஏசி இணைப்பை துண்டிக்கவும்.
Similar News
News April 6, 2025
அதிமுகவை பிளவுபடுத்த முயற்சி: செல்லூர் ராஜூ

நிர்மலா சீதாராமனை 2வது முறையாக செங்கோட்டையன் சந்தித்த நிலையில், பல்வேறு கருத்துகள் உலா வர தொடங்கியுள்ளன. இந்நிலையில், இருவரின் சந்திப்பை பெரிதாக்கி, அதிமுகவை பிளவுபடுத்த சிலர் முயற்சி செய்வதாக செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அரசியல் காரணங்களுக்காக சந்திப்பு நடந்ததாக இருவரும் சொல்லவில்லை. ஆனால், சிலருக்கு அதை பற்றி பேசவில்லை என்றால் தூக்கம் வரவில்லை என சாடினார்.
News April 6, 2025
ஜியோ பயனர்களுக்கு சலுகை நீட்டிப்பு

IPL-லின் போது JIO தனது ப்ரீபெய்டு பயனர்களுக்கு JioHotstar-ஐ இலவசமாக வழங்குகிறது. முன்னர் பல ரீசார்ஜ்களுக்கு அறிவிக்கப்பட்ட இந்த சலுகை, ஏப்.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நீங்கள் ₹100/₹195/₹949 ரீசார்ஜ் செய்தால், சுமார் 90 நாள்களுக்கு இந்த செயலியை இலவசமாகப் பார்க்கலாம். ₹100க்கு ரீசார்ஜ் செய்தால் 5GB Data, ₹195க்கு 15GB Data, ₹949க்கு 84 நாட்களுக்கு 2GB Data& அழைப்புகளை பெறலாம்.
News April 6, 2025
பிரதமர் திறந்துவைத்த தூக்கு பாலத்தில் பழுது

பாம்பனில் பிரதமர் மோடி இன்று திறந்துவைத்த நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. தூக்கு பாலம் ஒருபுறம் ஏற்றமாகவும், மறுபுறம் இறக்கமாகவும் இருப்பதால், அதனை கீழே இறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பழுதை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பாம்பனில் பழைய தூக்கு பாலத்திற்கு மாற்றாக ரூ.545 கோடியில் புதிய பாலம் கட்டி திறக்கப்பட்டுள்ளது.