News April 14, 2024

பகுதி நேர வேலை பார்ப்போர் எப்படி தனிநபர் கடன் பெறுவது?

image

பகுதி நேர வேலை பார்ப்போர், பின்வரும் 2 ஆலோசனைகளை கடைபிடித்தால், முழுநேர வேலை பார்ப்போர் போல தனிநபர் கடனை எளிதில் பெற முடியும். *கிரெட்டிட் ஸ்கோர் 750 புள்ளிகளுக்கும் அதிகமாக இருக்கும்படி பார்த்து கொண்டால், தனிநபர் கடன் வழங்க வங்கிகள், நிதி நிறுவனங்கள் முன்வரும் *வருமானம் ஈட்டக்கூடிய குடும்ப உறுப்பினர் ஒருவரை கூட்டு சேர்த்து விண்ணப்பித்தால் தனிநபர் கடன் கிடைக்கும்.

Similar News

News December 14, 2025

விருதுநகர்: பெற்றோர் திட்டியதால் மாணவன் தற்கொலை

image

விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த மாரிக்கனியின் மகன் தாமரைச்செல்வம் (18) அப்பகுதி தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். வழக்கம்போல கல்லூரிக்கு சென்று திரும்பிய அவரை, தாமதமாக வந்தததாக கூறி மாரிக்கனி திட்டியதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த தாமரைச்செல்வம் வீட்டின் மாடிக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 14, 2025

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்

image

2026 தேர்தலையொட்டி, புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், திமுக, அதிமுக, தேமுதிக, மனித நேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி சுமார் 500-க்கும் மேற்பட்டோர், நாகை மாவட்ட செயலாளர் மா.சுகுமாறன் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். அவர்கள் அனைவரும் விரைவில் விஜய்யை நேரில் சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

News December 14, 2025

சளியை கரைக்கும் சிம்பிள் கஷாயம்

image

சளி வாட்டும்போது அதில் இருந்து வெளியேற, மாத்திரைகளை தேடிச் செல்வதே பலரின் வழக்கம். ஆனால் சிம்பிளான கஷாயம் மூலம் சளியை கரைக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கு 2 கிளாஸ் தண்ணீரில், கிராம்பு -3, மிளகு -3, சுக்குப் பொடி – கால் ஸ்பூன், மஞ்சள் பொடி – 2 சிட்டிகை, பிளாக் சால்ட் – 2 சிட்டிகை, நா.சர்க்கரை – 1 ஸ்பூன் ஆகியவற்றை போட்டு கொதிக்கவிடுங்கள். அதை 1 டம்ளராக சுண்ட வைத்தால் கஷாயம் ரெடி.

error: Content is protected !!