News June 19, 2024
ஆன்லைனில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? (3/3)

ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ததும், அது புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்தோர் பட்டியலில் சேரும். அதிலுள்ள விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும். விண்ணப்பிக்கும்போது நீங்கள் அளித்த செல்போன் எண்ணுக்கு ஒவ்வொரு அப்பேட்டும் குறுந்தகவலாக அனுப்பப்படும். கடைசியில் குறுந்தகவலில் இருக்கும் தேதியில் சென்று தாலுகா அலுவலகத்தில் ரேஷன் கார்டை பெற்றுக் கொள்ளலாம்.
Similar News
News March 25, 2026
நம்மிடம் அவசர கால இருப்பு 9.5 நாட்களுக்கு மட்டுமே

இறக்குமதியில் தடை ஏற்பட்டால் நமது அவசர கால கச்சா எண்ணெய் கையிருப்பு 9.5 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மூலோபாய பெட்ரோலியக் கிடங்கில் 33.72 லட்சம் மெட்ரிக் டன் எண்ணெய் சேமிப்பில் உள்ளதாகவும், இந்த இருப்புக்கள் விசாகப்பட்டினம், மங்களூர் மற்றும் படூர் ஆகிய இடங்களில் இருப்பதாகவும் கூறியுள்ளது. RTI மூலம் இந்தியா டுடே கேள்விக்கு பதிலளித்துள்ளது.
News March 25, 2026
போர்.. பீர் பிரியர்களுக்கு அதிர்ச்சி!

நாட்டில் பீர் விலைகள் உயரும் என்றும், விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்றும் இந்திய பீர் உற்பத்தியாளர்கள் சங்கம் (BAI) தெரிவித்துள்ளது. போர் காரணமாக உற்பத்திச் செலவு 12-15% அதிகரித்துள்ளதாகவும், சில மாநிலங்களில் உற்பத்திச் செலவை விட விலைகள் குறைவாக உள்ளதாகவும் கூறியுள்ளது. பாட்டில் விலைகள் 20%, மூலப்பொருட்களின் விலை 20-25%, மற்றும் போக்குவரத்துச் செலவுகள் 10% அதிகரித்துள்ளன.
News March 25, 2026
இந்தியாவில் மிகவும் மாசுபட்ட நகரம்

சுவிஸ் நிறுவனமான IQAir வெளியிட்ட உலகளாவிய தரவரிசை 2025-ல் உபி உள்ள லோனி உலகின் மிகவும் மாசுபட்ட நகரம் என்பது தெரியவந்துள்ளது. மிகவும் மாசுபட்ட தலைநகரங்களின் புது தில்லி முதலிடம் வகிக்கிறது. அதே நேரத்தில், பாகிஸ்தான் உலகின் மிகவும் மாசுபட்ட நாடாக உருவெடுத்துள்ளது. இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. 2025-ல் உலகில் வெறும் 14% நகரங்கள் மட்டுமே WHO காற்றுத் தர நிர்ணயங்களை எட்டியுள்ளன.


