News June 24, 2024
சிறார்களுக்கான ஆதாருக்கு விண்ணப்பிப்பது எப்படி? (3/3)

இதுபோல விண்ணப்பித்த 90 நாள்களில், சிறார்களுக்கு ஆதார் எண் வழங்கப்படும். வீட்டிற்கும் ஆதார் அட்டை தபாலில் அனுப்பி வைக்கப்படும். பிறகு சிறார்கள், 15 வயது பூர்த்தியானதும் ஆதார் சேவை மையம் அல்லது இ-சேவை மையம் சென்று தங்களது பயோ மெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும். அதுவரை எத்தகைய புதுப்பிப்பையும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. அதே ஆதாரை பயன்படுத்தலாம்.
Similar News
News September 14, 2025
பசுவை விலங்காக கூட கருதுவதில்லை: மோடி

நாட்டில் விலங்குகள் நல ஆர்வலர்கள் அதிகமாக இருக்கும் நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் பசுவை விலங்காக கூட கருதுவதில்லை என PM மோடி கூறியுள்ளார். இதனை, விலங்குகள் மீதான ஆர்வலர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கறை என்றும் PM குறிப்பிட்டார். நாடு முழுவதும் தெருநாய்கள் விவகாரம் விவாதமாகியுள்ள நிலையில், மோடியின் இந்த பேச்சு தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
News September 14, 2025
ஜீரண சக்தியை அதிகரிக்கும் மூலிகை தேநீர்!

உடலின் ரத்த ஓட்டத்தைத் துரிதப்படுத்தவும், ஜீரண சக்தியை அதிகரிக்கவும் சீமை சாமந்தி தேநீர் உதவும்.
★சாமந்திப்பூ இதழ்களைப் பிரித்து நன்கு காய வைக்கவும்.
★1 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் 1 தேக்கரண்டி உலர்ந்த பூக்களை போடவும்.
★8- 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும்.
★அதை அடுப்பிலிருந்து இறக்கி, அதில் கொஞ்சம் தேன் கலந்து கொண்டால், சத்தான சீமை சாமந்தி தேநீர் ரெடி. SHARE IT.
News September 14, 2025
7 மாவட்டங்களில் மழை தொடரும்: IMD

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும் என IMD கணித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் நள்ளிரவு முதலே பரவலாக இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்ட்ல சொல்லுங்க.