News February 23, 2025
எவ்வளவு சர்க்கரை ஆபத்து?

உடல் பருமனுக்கு காரணமாக சர்க்கரை (Added Sugars) மாறியிருக்கிறது. அதில், நாளொன்றுக்கு யார் எவ்வளவு சாப்பிடலாம் என்று பார்ப்போம்.
1 முதல் 3 வயது – 12.5 கிராம்
4 முதல் 6 வயது – 15 கிராம்
7 முதல் 10 வயது – 20 கிராம்
11 முதல் 18 வயது – 25 கிராம்
18 வயதுக்கு மேல் – 50 கிராம்
இதற்கு மேல் சர்க்கரை எடுத்துக் கொள்வது பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
Similar News
News February 23, 2025
PM Kisan: வங்கிக் கணக்கில் நாளை ரூ.2000

மத்திய அரசின் PM-KISAN திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.2000 உதவித்தொகை நாளை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. 19ஆவது தவணையான இந்த உதவித் தொகையை நாடு முழுவதும் 9.8 கோடி விவசாயிகள் பெற உள்ளனர். முன்னதாக, இந்த உதவித்தொகையை வழக்கமாகப் பெறும் விவசாயிகள், தங்களது வங்கிக் கணக்கில் E-KYCயை செய்து முடிக்கவும். இல்லையெனில் கணக்கில் பணம் வராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
News February 23, 2025
கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கில் மார்ச் 5இல் தீர்ப்பு

சி.பி.ஐ. விசாரணைக்கு தடை கோரிய கார்த்தி சிதம்பரம் மனு மீது மார்ச் 5ஆம் தேதி டெல்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. சீனர்களுக்கு விசா வாங்கி கொடுக்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. 2022இல் வழக்குப்பதிவு செய்தது. இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி காவேரி பவேஜா, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நிலையில், தீர்ப்பை மார்ச் 5ஆம் தேதி ஒத்திவைத்துள்ளார்.
News February 23, 2025
கங்கை நதியின் அதிசய சக்தி.. ஆராய்ச்சியாளர்கள் வியப்பு!

கங்கை நதி பிற நன்னீர் நதிகளை விட 50 மடங்கு வேகமாக கிருமிகள் மற்றும் மாசுபடுத்திகளை அழிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று நீரியல் நிபுணர் அஜய் சோன்கர் கூறி தெரிவித்துள்ளார். நன்னீர் நதியான கங்கையில், 1,100 வகையான இயற்கையான பாக்டீரியா கொல்லிகள் (பாக்டீரியோபேஜ்) உள்ளதாகவும், இவை மாசுபாட்டை நீக்கி, அவற்றின் எண்ணிக்கையை விட 50 மடங்கு அதிகமான கிருமிகளை கொன்று சுத்திகரிக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.