News November 24, 2024
IPLஇல் எந்த அணியிடம் எவ்வளவு தொகை உள்ளது?

ஐபிஎல் ஏலம் 2025 இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறவிருக்கிறது. இதில், எந்த அணி எவ்வளவு பர்ஸ் பேலன்ஸ் வைத்திருக்கிறது என்பதை இப்போது பார்க்கலாம். CSK – ₹55 கோடி, SRH – ₹45 கோடி, MI – ₹45 கோடி, LSG – ₹69 கோடி, GT – ₹69 கோடி, RR – ₹41 கோடி, KKR – ₹63 கோடி, DC – ₹76 கோடி, RCB – ₹ 83 கோடி, PBKS – ₹110 கோடி மீதம் வைத்திருக்கின்றன.
Similar News
News December 23, 2025
தங்கம் விலை மளமளவென மாறியது

ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கத்தின் விலையில் இன்று மிகப்பெரிய மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், சர்வதேச சந்தையில் இன்று (டிச.23) 1 அவுன்ஸ்(28g) தங்கம் விலை $127.48 அதிகரித்து $4,467.79 ஆக உள்ளது. வெள்ளியும் 1 அவுன்ஸ்-க்கு $1.97 உயர்ந்து $69.11-க்கு விற்பனையாகிறது. இதன் தாக்கத்தால் இந்திய சந்தையில் தங்கத்தின் விலை (தற்போது ₹₹1,00,560) இன்று கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
News December 23, 2025
நான் முள்ளிவாய்க்கால் பீரங்கி பயிற்சியில்.. சீமான்

முள்ளிவாய்க்காலில் பீரங்கி பயிற்சி எடுத்தபோது, அங்கிருந்த வீரப்பெண் சொன்னது தனக்கு உத்வேகமாக இருந்ததாக சீமான் கூறியுள்ளார். திருச்சி நாதக கூட்டத்தில் பேசிய அவர், கராத்தே உள்ளிட்டவற்றை கற்றுத்தேர்ந்த தன்னால் குறி பார்த்து பீரங்கியை இயக்க முடியவில்லை. அப்போது, அங்கிருந்த தமிழீழ பெண் போராளி, ‘உடலில் வலு இருந்தால் மட்டும் போதாது, உள்ளத்தில் வெறி இருக்க வேண்டும் அண்ணா’ என கூறியதாக தெரிவித்துள்ளார்.
News December 23, 2025
இந்திய அணியின் நடத்தை நல்லதல்ல: பாக்., வீரர்

U 19 ஆசியக் கோப்பை ஃபைனலில் வைபவ் சூர்யவன்ஷியின் செயல் பேசுபொருளானது. இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள Ex பாக்., வீரர் சர்ஃபராஸ் அஹமத், தற்போதைய இந்திய அணியின் நடத்தை விளையாட்டுக்கு நல்லதல்ல என கூறியுள்ளார். அவர்கள் செய்தது நெறிமுறை அற்றது என்றும் விமர்சித்துள்ளார். ஆனால், தான் விளையாடிய காலத்தில் இருந்த தோனி, கோலியின் அணிகள் கண்ணியமாக நடந்துகொண்டனர் என்றும் தெரிவித்தார். நீங்க என்ன சொல்றீங்க?


