News November 24, 2024

IPLஇல் எந்த அணியிடம் எவ்வளவு தொகை உள்ளது?

image

ஐபிஎல் ஏலம் 2025 இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறவிருக்கிறது. இதில், எந்த அணி எவ்வளவு பர்ஸ் பேலன்ஸ் வைத்திருக்கிறது என்பதை இப்போது பார்க்கலாம். CSK – ₹55 கோடி, SRH – ₹45 கோடி, MI – ₹45 கோடி, LSG – ₹69 கோடி, GT – ₹69 கோடி, RR – ₹41 கோடி, KKR – ₹63 கோடி, DC – ₹76 கோடி, RCB – ₹ 83 கோடி, PBKS – ₹110 கோடி மீதம் வைத்திருக்கின்றன.

Similar News

News November 7, 2025

BREAKING: கட்சியில் இருந்து கூண்டோடு நீக்கம்

image

ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையன் ஆதரவாளர்களை கூண்டோடு கட்சியிலிருந்து நீக்கி EPS அறிவித்துள்ளார். செங்கோட்டையனின் உறவினரான Ex MP சத்யபாமா உடன், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், குறிஞ்சிநாதன்(கோபி மேற்கு ஒன்றியம்), ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன்,Ex ஒன்றிய தலைவர்கள் மவுதீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, அத்தாணி பேரூர் கழக செயலாளர் SS ரமேஷ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.

News November 7, 2025

போலீஸில் புகாரளித்த பாடகி சின்மயி!

image

கிளப்ஹவுஸ் செயலியில் உரையாடிக்கொண்டிருந்த போது பாடகி சின்மயியின் குழந்தைகள் இறக்க வேண்டும் என சிலர் பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில், தனது குழந்தைகளுக்கு எதிராக சிலர் வெறுப்பை பரப்பி வருவதாக ஹைதராபாத் காவல் ஆணையர் வி.சி.சஜ்ஜனாரிடம் சின்மயி X-ல் புகாரளித்துள்ளார். இவ்விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News November 7, 2025

மோதல் போக்கு இருந்தால் நிதி வராது: நயினார்

image

தமிழகத்திற்கு தேவையான நிதியை தராமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக திமுக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்தால் நிதி வராது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் மக்களுக்கு நன்மை இல்லை என்று கூறிய அவர், மத்திய – மாநில அரசுகளின் உறவு நன்றாக இருந்தால் தான் மத்திய அரசின் நிதி இங்கு வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!