News May 8, 2024
அதானியிடமிருந்து ராகுல் எவ்வளவு நிதி பெற்றார்?

அதானியிடமிருந்து தேர்தலுக்காக காங்கிரஸ் எவ்வளவு நிதி பெற்றது என்ற விவரத்தை ராகுல் காந்தி சொல்ல வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். கரிம்பூரில் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “அம்பானி, அதானி உள்ளிட்ட 5 தொழிலதிபர்களைப் பற்றி ராகுல் அடிக்கடி பேசுவார். ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, அவர்களைப் பற்றி பேசாமல் ஏன் திடீர் மௌனம் காத்து வருகிறார்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News September 24, 2025
WhatsApp-ல் வரும் அசத்தலான அப்டேட்..

பயனர்களின் வசதிக்காக WhatsApp தற்போது ‘Translate’ என்னும் புது வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது. மெசேஜ்கள் வேறு மொழியில் வந்தாலும், அதை தேவையான மொழியில் ‘Translate’ செய்யலாம். ஆண்ட்ராய்டு போன்களில் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 6 மொழிகளில் இச்சேவை வழங்கப்படும் நிலையில், விரைவில் தமிழும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், iOS-ல் 19 மொழிகளில் இச்சேவை கிடைக்குமென தகவல் வெளிவந்துள்ளது.
News September 24, 2025
அதிமுக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதற்குமுன், CM ஸ்டாலின், இபிஎஸ், விஜய் வீட்டிற்கும், GST, வானிலை மைய அலுவலகங்களுக்கும் மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
News September 24, 2025
ஆம்லேட் சாப்பிட்டவர் உயிரிழப்பு… சோகம்!

உணவை அவசர அவரசமாக விழுங்க கூடாது, நன்றாக மென்று சாப்பிட வேண்டும் என்பதற்கு கேரளாவில் நடந்த இச்சம்பவம் ஒரு உதாரணம். விஷாந்தி டி’சோசா என்பவர் சாலையோர கடையில் ஆம்லெட், வாழைப்பழம் வாங்கி அவற்றை வேகவேகமாக விழுங்கியுள்ளார். உணவு தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டதால், சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார். சாப்பிடும் போது அவசரப்பட வேண்டாம். இந்த பயனுள்ள எச்சரிக்கையை நண்பர்களுக்கு SHARE செய்யலாமே!