News February 13, 2025
ரூபாய் நோட்டை அச்சடிக்க எவ்வளவு செலவாகிறது?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739420497512_1231-normal-WIFI.webp)
₹10 நோட்டுக்கு ₹0.96 *₹20 நோட்டுக்கு ₹0.95 *₹50 நோட்டுக்கு ₹1.13 *₹100 நோட்டுக்கு ₹1.17 *₹200 நோட்டுக்கு ₹2.37 *₹500 நோட்டுக்கு ₹2.29 செலவாகிறதாம். தற்போது ₹2,000 நோட்டு புழக்கத்தில் இல்லை. அதே நேரத்தில், ஒப்பிடுகையில் நாணயங்களின் உற்பத்திக்கே அதிகம் செலவாகிறது. ரிசர்வ் வங்கி, மத்திய அரசு ஒன்றிணைந்து இதற்கான செலவை செய்கிறார்கள்.
Similar News
News February 13, 2025
வருமான வரி மசோதா: என்ன மாற்றங்கள்?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739443945589_1328-normal-WIFI.webp)
லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதாவில் எந்த வரிகளும் சேர்க்கப்படவில்லை. 622 பக்கங்கள் கொண்ட இதில் 1961 ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. ‘முந்தைய ஆண்டு’, ‘மதிப்பீட்டு ஆண்டு’ வார்த்தைகளும் புதிய மசோதாவில் நீக்கப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக ‘வரி ஆண்டு’ என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது.
News February 13, 2025
‘ஆஸ்கர்’ நடிகர் மீது பாலியல் வழக்கு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739446436349_1142-normal-WIFI.webp)
ஆஸ்கர் விருது வென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் கெவின் ஸ்பேஸ் மீது இங்கிலாந்து நடிகை ஒருவர் பாலியல் வழக்குத் தொடுத்துள்ளார். அமெரிக்கன் பியூட்டி, யுசுவல் சஸ்பெக்ட்ஸ் படங்களுக்காக 2 முறை ஆஸ்கர் விருது பெற்றவர் கெவின். அவர் மீது 2017இல் மீ டு இயக்கத்தில் முதலில் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, மேலும் பல புகார்கள் கூறப்பட்ட நிலையில், தற்போது லண்டன் கோர்ட்டில் நடிகை வழக்கு தொடர்ந்துள்ளார்.
News February 13, 2025
BREAKING: தமிழக அமைச்சரவையில் மாற்றம்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739448860817_1328-normal-WIFI.webp)
TN அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்த காதி, கிராம தொழில்கள் இலாகா, அமைச்சர் பொன்முடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வனத்துறையுடன் சேர்த்து காதி, கிராம தொழில்கள் இலாகாவையும் பொன்முடி இனி கவனிப்பார். CM ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று, அமைச்சரவை மாற்றத்திற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.