News April 1, 2025
இன்னும் எத்தனை 3 மாதங்கள்? கேள்வி கேட்கும் பெண்கள்

தகுதியுடைய விடுபட்ட பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை 3 மாதத்திற்குள் அளிக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் முதலில் அறிவித்தார். இதே கருத்தையே அடுத்தடுத்து செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் உதயநிதி தெரிவித்தே 2 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அமைச்சர்கள் 3 மாதங்கள் என பொதுவாக தெரிவிப்பதை பார்க்கும் பெண்கள், இன்னும் எத்தனை 3 மாதங்கள் ஆகும் என கேள்வி கேட்கின்றனர்.
Similar News
News September 18, 2025
தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வாரம் கெடு: ராகுல் காந்தி

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கத்துக்கு ஒரு கும்பல் திட்டமிட்டு விண்ணப்பித்து வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். முக்கியமாக பட்டியலினத்தவர், பழங்குடியினர் வாக்குகள் குறிவைத்து நீக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். தனது குற்றச்சாட்டுக்கு 100% ஆதாரம் இருப்பதாக தெரிவித்த ராகுல் காந்தி, ஒரு வாரத்தில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் எனவும் கெடு விதித்துள்ளார்.
News September 18, 2025
BREAKING: செங்கோட்டையன் நீக்கம்? இபிஎஸ் பதில்

செங்கோட்டையனின் பதவி பறிப்பு குறித்து பேசிய EPS, ‘கட்சி கட்டுப்பாட்டை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது அதிமுகவில் வழக்கம்’ என்று விளக்கமளித்தார். அப்போது, செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கம் செய்வீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய எழுப்பினர். அதற்கு, உட்கட்சி பிரச்னையை பொதுவெளியில் பேசமுடியாது என சூசகமாக பதிலளித்தார்.
News September 18, 2025
கர்சீப்பை வைத்து முகத்தை மறைக்கவில்லை: இபிஎஸ்

டெல்லியில் அமித்ஷா வீட்டிலிருந்து வெளியே வந்தபோது கர்சீப்பை எடுத்து முகத்தை துடைக்கத்தான் செய்தேன்; மறைக்கவில்லை என்று இபிஎஸ் விளக்கமளித்துள்ளார். திட்டமிட்டு தன் மீது அவதூறாக செய்தி வெளியிடப்பட்டதாக குற்றம் சாட்டினார். மேலும், இனிமேல் பாத்ரூம் போனால் கூட பத்திரிக்கையாளர்களிடம் சொல்லிவிட்டுதான் போக வேண்டிய அரசியல் சூழல் இருப்பதாக வேதனையுடன் கூறியுள்ளார்.