News April 1, 2025

இன்னும் எத்தனை 3 மாதங்கள்? கேள்வி கேட்கும் பெண்கள்

image

தகுதியுடைய விடுபட்ட பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை 3 மாதத்திற்குள் அளிக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் முதலில் அறிவித்தார். இதே கருத்தையே அடுத்தடுத்து செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் உதயநிதி தெரிவித்தே 2 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அமைச்சர்கள் 3 மாதங்கள் என பொதுவாக தெரிவிப்பதை பார்க்கும் பெண்கள், இன்னும் எத்தனை 3 மாதங்கள் ஆகும் என கேள்வி கேட்கின்றனர்.

Similar News

News November 8, 2025

BREAKING: வீடியோவை கொடுத்தார் விஜய்!

image

கரூர் பிரசாரத்தின் போது விஜய் பயணித்த பஸ்ஸின் சிசிடிவி காட்சிகளை தான்தோன்றிமலை சிபிஐ அலுவலகத்தில் விஜய் தரப்பு ஒப்படைத்தது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணையில், பிரசார பஸ் சிசிடிவி காட்சிகளை 3 நாள்களுக்குள் சமர்ப்பிக்க சிபிஐ கோரியிருந்தது. இந்நிலையில், அது தொடர்பான காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்கை தவெக அலுவலகத்தின் உதவியாளர் குரு, சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

News November 8, 2025

ஆஸ்கர் அருங்காட்சியகத்தில் முதல் இந்திய படம்!

image

ஆஸ்கர் வழங்கும் அகாடமி அமைப்பு, சினிமா துறைக்கென உருவாக்கிய மியூசியம், அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் மியூசியம். இங்கு இதுவரை எந்த இந்திய படமும் திரையிடப்பட்டது இல்லை. ஆனால், இந்த குறையை நீக்கி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது ‘பிரமயுகம்’. ராகுல் சதாசிவன் இயக்கத்தில், மம்மூட்டி நடிப்பில் வெளியான பிரமயுகம், இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

News November 8, 2025

டிச.12-ல் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்: ராமதாஸ்

image

இடைக்கால தீர்வாக வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி டிச.12-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், அந்தந்த சாதியின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்தினார்.

error: Content is protected !!