News April 17, 2025

எத்தனை என்கவுன்ட்டர்கள்? ஹைகோர்ட் கிளை கேள்வி

image

சமீபத்தில் எத்தனை என்கவுன்ட்டர்கள் நடந்துள்ளன என்று காவல்துறைக்கு ஹைகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த கோர்ட், காவல்துறையினரின் பாதுகாப்புக்குதான் துப்பாக்கி அளிக்கப்பட்டு உள்ளது என்றும், சுடுவதற்கு அல்ல என்றும் தெரிவித்தது. குற்றவாளிகளை காலுக்கு கீழேதான் சுட வேண்டும் என்றும் காவல்துறைக்கு கோர்ட் அறிவுறுத்தியது.

Similar News

News December 3, 2025

BREAKING: இரவில் சந்திப்பு… மீண்டும் இணைகிறாரா OPS?

image

டெல்லிக்கு OPS சென்றுள்ள நிலையில், அவருக்கு பின்னாடியே குருமூர்த்தியும் விரைந்துள்ளார். இருவரும் நள்ளிரவில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. புதிய கட்சியை தொடங்குவதற்காக OPS டெல்லிக்கு சென்றதாக கூறப்பட்ட நிலையில், மீண்டும் NDA கூட்டணியில் இணைவது குறித்து நட்டாவை சந்தித்து பேசவிருக்கிறாராம். ஒருவேளை ஓபிஎஸ் NDA கூட்டணிக்கு வந்தால், EPS எவ்வாறு அரசியல் காய்களை நகர்த்துவார் என கேள்வி எழுந்துள்ளது.

News December 3, 2025

ஐரோப்பாவுடன் போர் செய்ய ரெடி: புடின்

image

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த USA போட்ட டீல் ரஷ்யாவுக்கு சாதகமாக இருப்பதாக ஐரோப்பா விமர்சித்திருந்தது. இதனால் அதில் சில மாற்றங்களை செய்திருந்தது USA. இதனால் கடுப்பான புடின், ரஷ்யாவால் ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை வரையறுக்க USA-வை ஐரோப்பாவை தூண்டுவதாக விமர்சித்துள்ளார். மேலும், ஐரோப்பாவுடன் போர்புரியும் எண்ணம் இல்லை என்ற அவர், ஆனால் போர்தான் வேண்டுமென்றால் அதற்கும் ரெடி என எச்சரித்துள்ளார்.

News December 3, 2025

கனமழை… அடுத்தடுத்து விடுமுறை அறிவிப்பு

image

கனமழை எதிரொலியாக அடுத்தடுத்து விடுமுறை அறிவிப்பு வெளியாகி வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாணவர்கள் பாதுகாப்பு கருதி கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். ஏற்கெனவே, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!