News April 4, 2025
அந்த வீரனுக்கு எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும்..

குஜராத்தில் நேற்று நள்ளிரவு இந்திய விமானப்படையைச் சேர்ந்த போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் ஹரியானாவைச் சேர்ந்த லெப்டினன்ட் சித்தார்த் யாதவ் (28) உயிரிழந்தார். இவருக்கு 10 நாள்களுக்கு முன்புதான் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நவம்பர் 2ஆம் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில், அநியாயமாக உயிர் பறிபோயுள்ளது. சித்தார்த்தின் பூட்டன், தாத்தா, அப்பா என அவரது குடும்பமே ராணுவ சேவை செய்தவர்களாவர்.
Similar News
News November 20, 2025
மயிலாடுதுறை: B.E படித்தவர்களுக்கு சூப்பர் வேலை!

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.Sc., B.E., B.Tech., B.Com., BBA.,
3. கடைசி தேதி : 14.12.2025 @ 11.30 PM
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500
5. வயது வரம்பு: குறைந்தபட்சம் 20 அதிகபட்சம் 26
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..
News November 20, 2025
நாகை: பேருந்து நிலையத்தில் கிடந்த பிணம்

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று சுமார் 70 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் சம்பவயிடத்திற்கு பிரேதத்தை கைப்பற்றி ஒரத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 20, 2025
ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்: CM ஸ்டாலின்

கோவைக்கு PM மோடி வந்து சென்ற ஈரம் காய்வதற்குள், நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்து, மத்திய பாஜக அரசு அடுத்த துரோகத்தை செய்துள்ளதாக CM ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்த தனது X பதிவில், கனமழையால் ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் அழுகுரல் ஏன் PM-க்கு கேட்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


