News April 26, 2025

பாகிஸ்தானுடன் எத்தனை பார்டர் கிராஸிங் உள்ளன?

image

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பெரும் பதற்றம் நிலவுகிறது. உடனடியாக இந்திய அரசு, வாகா – அத்தாரி எல்லையை மூடி உத்தரவிட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே 3 முக்கிய ரோட் பார்டர் கிராஸிங் உள்ளன. ➙வாகா எல்லை ➙கர்தர்பூர் எல்லை ➙கந்தா சிங் வாலா எல்லை ஆகியவை உள்ளன. இதில் கர்தர்பூர் எல்லை இன்னும் சீக்கியர்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 26, 2025

9,970 காலியிடங்கள்… அப்ளை செய்துவிட்டீர்களா?

image

ரயில்வேயில் துணை ஓட்டுநராக (Assistant Loco Pilot) பணியாற்ற விரும்புகிறீர்களா? இந்த பணிக்கு 9,970 காலி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலையில் சேர SSLC தேர்ச்சி பெற்று, ITI முடித்திருக்க வேண்டும். இன்ஜினியரிங்கில் Diploma, பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆரம்ப சம்பளம்: ரூ.19,900. வயது வரம்பு 30. மே.11க்குள் <>RRB<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News April 26, 2025

பாகிஸ்தானியர்கள் விசா காலக்கெடு

image

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களின் விசா காலக்கெடு குறித்து முக்கிய உத்தரவு வெளியாகியுள்ளது. SAARC விசா உள்ளவர்கள் இன்று (ஏப்.26) நள்ளிரவுக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். வணிக, பத்திரிகையாளர், மாணவர் உள்ளிட்ட விசா உள்ளவர்கள் நாளைக்குள்ளும், மருத்துவ விசா உள்ளவர்கள் வருகிற 29-க்குள் வெளியேற வேண்டும். இனி எந்த புதிய விசாவும் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படாது.

News April 26, 2025

கோவையில் புயல்: ஆதவ்

image

மக்கள் ஆட்சியை கொண்டுவர ஒரு ஜனநாயகன் தேவைப்படுகிறான்; அதற்காக ஒரு புயல் இன்று கோவையை நெருங்கியுள்ளது என்று விஜய்யை சுட்டிக்காட்டி ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். தமிழகத்தில் அரசியல் மாற்றம் இளைஞர்களால் உருவானது. தற்போது விஜய் செல்லும் இடமெல்லாம் இளைஞர்கள் தொடருகிறார்கள் என்பதால் 2026-இல் தவெக ஆட்சியைப் பிடிக்கும். அதற்கு இளம்பெண்கள் படை உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

error: Content is protected !!