News April 26, 2025
பாகிஸ்தானுடன் எத்தனை பார்டர் கிராஸிங் உள்ளன?

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பெரும் பதற்றம் நிலவுகிறது. உடனடியாக இந்திய அரசு, வாகா – அத்தாரி எல்லையை மூடி உத்தரவிட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே 3 முக்கிய ரோட் பார்டர் கிராஸிங் உள்ளன. ➙வாகா எல்லை ➙கர்தர்பூர் எல்லை ➙கந்தா சிங் வாலா எல்லை ஆகியவை உள்ளன. இதில் கர்தர்பூர் எல்லை இன்னும் சீக்கியர்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 24, 2025
உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் பழங்கள்

உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், நாள் முழுவதும் அவதியாக இருக்கும். பெரும்பாலான நேரங்களில் ஊட்டச்சத்து குறைபாடே, உடல் ஆரோக்கியம் பாதிப்படைய காரணமாக அமைகிறது. இதனை, பழங்கள் மூலம் எளிதாக சரிசெய்யலாம். அவை என்னென்ன பழங்கள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் ஏதாவது ஒரு பழத்தை தினமும் சாப்பிடுவது சிறந்தது. SHARE.
News December 24, 2025
விஜய் Spoiler அல்ல: தமிழிசை

விஜய் ஒரு Spoiler என பியூஷ் கோயல் பேசியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இப்படியான எந்த கருத்தையும் பியூஷ் பேசவில்லை என தமிழிசை மறுப்பு தெரிவித்துள்ளார். அத்துடன், விஜய் ஸ்பாய்லரும் இல்லை, பாய்லரும் இல்லை என்றும் அவர் கூறினார். விஜய் தனியாக நிற்பதைவிட, அனைவரும் சேர்ந்து நின்றால் வெற்றி இன்னும் சுலபமாக இருக்கும் என்றும் தமிழிசை, கூட்டணிக்கு <<18646043>>மீண்டும்<<>> அழைப்பு விடுத்துள்ளார்.
News December 24, 2025
பொங்கல் பரிசுத்தொகை.. அரசு மகிழ்ச்சியான அறிவிப்பு

பொங்கல் பரிசுத்தொகுப்பு & தொகையை ரேஷன் அட்டைதாரர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இதனிடையே, ₹2,500 ரொக்கப்பரிசு வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பொங்கல் பரிசுத்தொகை பற்றி இப்போது சொல்ல மாட்டோம், அது ரகசியமாகத் தான் இருக்கும், திடீரென்று தான் அறிவிப்போம் என அமைச்சர் ரகுபதி சஸ்பென்ஸ் வைத்துள்ளார். இதனால் மிக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.


