News February 11, 2025
எவ்வளவு நேரம் பல் துலக்கலாம்?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739208261589_347-normal-WIFI.webp)
பல் துலக்குவதன் மூலம், வாயிலுள்ள பாக்டீரியாக்கள் போன்ற கிருமிகள் வயிற்றுக்குள் நுழைவது தடுக்கப்படுகிறது. ஆனால், எவ்வளவு நேரம் பல் துலக்குவது என்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது. அதிக நேரம் பல் துலக்குவது, பல் எனாமலை பாதிக்கும். அதனால் 2 நிமிடம் பல் துலக்கினாலே போதுமானது. 3 மாதத்திற்கு ஒருமுறை பிரஷ்-ஐ மாற்ற வேண்டும். பிரஷ் நிறைய பேஸ்ட் தேவையில்லை. ஒரு பட்டாணி அளவான பேஸ்ட் போதுமானது. நீங்க எப்படி?
Similar News
News February 11, 2025
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு புது ஓனர்?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739250294535_1173-normal-WIFI.webp)
குஜராத் டைட்டன்ஸ் அணியின் 67% பங்குகளை டோரண்ட் குழுமம் வாங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு லக்சம்பர்க்கைச் சேர்ந்த CVC கேப்பிடல், குஜராத் அணியை வாங்கியது. அந்த அணி IPLல் அறிமுகமான 2022 சீசனிலேயே கோப்பையை வென்றது. 2023 சீசனில் இறுதிப் போட்டி வரை சென்று ரன்னர் அப் ஆனது. அந்த அணியின் கேப்டனாக தற்போது ஷுப்மன் கில் செயல்பட்டு வருகிறார்.
News February 11, 2025
விஜய் தேவரகொண்டாவிற்கு வாய்ஸ் கொடுக்கும் சூர்யா
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739256141453_1173-normal-WIFI.webp)
விஜய் தேவரகொண்டா நடிக்கும் 12ஆவது படத்தின் தமிழ் டீசருக்கு நடிகர் சூர்யா வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நாளை டீசர் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பிற மொழி படங்களுக்கு சூர்யா வாய்ஸ் கொடுப்பது இது முதல்முறை அல்ல. முன்னதாக, மணி ரத்னம் இயக்கத்தில் அபிஷேக் பச்சன் நடித்த ‘குரு’ படத்திற்கும், சூர்யா தமிழ் டப்பிங் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News February 11, 2025
IITகளில் மீண்டும் அநீதி: மதுரை எம்பி
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739257122805_1173-normal-WIFI.webp)
IITகளில் முனைவர் படிப்பில் 560 OBC, SC, ST மாணவர்களின் இடங்கள் பறிக்கப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் MP குற்றஞ்சாட்டியுள்ளார். இடஒதுக்கீடு மூலம் மாணவர்கள் பெற்ற அனுமதி விவரங்களை துறை வாரியாக வெளியிடுமாறு நாடாளுமன்றத்தில் கேட்டதாகவும், அதற்கு மத்திய அமைச்சர் மழுப்பலாக பதில் கூறியதாகவும் தெரிவித்துள்ள அவர், அமைச்சர் தந்த அரைகுறை விவரங்களைக் கொண்டே 590 இடங்கள் பறிபோனது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார்.