News April 21, 2025
போப் தேர்வு எப்படி நடைபெறும்? (2/3)

வாடிகன் நாட்டில் உள்ள சிஸ்டின் சேப்பலில் மூடிய அறையில் தேர்தல் நடைபெறும். 80 வயதுக்கு குறைவான கர்தினல்கள் மட்டுமே வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். பொதுவாக, கிறிஸ்தவர்கள் அனைவருமே போப் தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றவர்கள்தான் என்றாலும், கர்தினல்களில் ஒருவர்தான் போட்டியிடுவார். வாக்குச்சீட்டு முறைப்படி நடைபெறும் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் பெறுபவர் வெற்றி பெறுவார்.
Similar News
News November 4, 2025
டாப்-9 நகரங்கள்: இதிலுள்ள தமிழக நகரம் எது தெரியுமா?

கலை, இசை, உணவு, சினிமா, கைவினை, இலக்கியம், வடிவமைப்பு போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் நகரங்களை “படைப்பாற்றல் நகரங்கள்” என்று UNESCO அறிவிக்கிறது. சமீபத்தில் லக்னோவும் அந்த அங்கீகாரம் பெற்றது. இதனுடன் சேர்த்து இந்தியாவில், மொத்தம் 9 படைப்பாற்றல் நகரங்கள் உள்ளன. அவை எந்தெந்த நகரங்கள், அதன் சிறப்புகளை மேலே போட்டோக்களில் கொடுத்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT
News November 4, 2025
பிஹார் தேர்தல்: இன்றுடன் பிரசாரம் நிறைவடைந்தது

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் நவ.6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. 243 தொகுதிகளை கொண்ட பிஹாரில், முதல் கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எஞ்சிய தொகுதிகளுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு நவ.11-ம் தேதி நடைபெற உள்ளது.
News November 4, 2025
BREAKING: நடிகை த்ரிஷா வீட்டில் குவிந்த போலீஸ்… பதற்றம்

சென்னையில் நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது. இதேபோல், நடிகர் விஷால், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டோரின் வீடுகளுக்கும் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.


