News October 20, 2024

உதயநிதி எப்படி துணை முதல்வர் ஆனார்? தமிழிசை

image

தமிழ்நாட்டில் ஆன்மிகமும், அரசியலும் நிச்சயம் கலக்கும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திமுகவின் கொள்கை என்றால் உதயநிதி இந்த வயதில் எப்படி துணை முதல்-அமைச்சர் ஆனார்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணாவும், பெரியாரும் பேசிய சமூக நீதியை விட ஆண்டாளும், பெரியாழ்வாரும் சமூகநீதியை அதிகம் பேசியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 21, 2025

மாநாட்டு மேடையில் விஜய் சொன்ன Kutty Story..

image

ஒரு ராஜா தளபதியை தேர்ந்தெடுக்க 10 பேரிடம் விதைகளை கொடுத்தார். அதில் ராஜாவை ஏமாற்ற நினைத்த 9 பேர் வேறு விதையை மரமாக வளர்த்து கொண்டுவந்தனர். ஆனால் அந்த ராஜா விதையோடு வந்த ஒருவனை தான் தளபதியாக தேர்ந்தெடுத்தார். ஏனென்றால் அவர் கொடுத்த விதைகள் வேகவைக்கப்பட்டவை, அது வளராது என கூறி கதையை முடித்துக்கொண்ட விஜய், உண்மையான ஒருவரையே தலைவராக தேர்ந்தெடுக்கவேண்டும் என மக்களிடம் கோரிக்கை வைத்தார்.

News August 21, 2025

SPACE: ஜூபிடரில் உள்ள RED DOT மர்மம்..என்ன தெரியுமா?

image

நமது சூரியக் குடும்பத்தில் உள்ள வியாழன் கோளின் மேற்பரப்பில் ஒரு தனித்துவமான சிவப்பு புள்ளியை நாம் கண்டிருப்போம். இதை என்னவென்று நீங்கள் யோசித்தது உண்டா? வியாழனில் அமைந்துள்ள இந்த சிவப்பு புள்ளி ஒரு சாதாரண புள்ளி அல்ல. இது 350 நூற்றாண்டுகளுக்கு மேலாக சுழன்றுக்கொண்டிருக்கும் ஒரு சுழல் என்கின்றனர் விஞ்ஞானிகள். இச்சுழல் சுமார் 16,000 கிமீ நீளமும் 12,000 கிமீ அகலமும் கொண்டது. SHARE.

News August 21, 2025

கவர்னருக்கு காலக்கெடு கூடாது… மத்திய அரசு வாதம்

image

ஜனாதிபதி, கவர்னருக்கு <<17154106>>காலக்கெடு<<>> விதிப்பது தொடர்பான வழக்கு இன்று SC-யில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘பாதிக்கப்பட்ட மாநிலம் கோர்ட்டை அணுகினால், கோர்ட் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா?’ என CJI கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த மத்திய அரசு சொலிசிட்டர் ஜெனரல், ‘அனைத்து பிரச்னைக்கும் நீதிமன்றமே தீர்வு அல்ல. அரசியல் சாசன அதிகாரிக்கு உத்தரவிடும் அதிகாரம் கோர்ட்டுக்கு இல்லை’ என்று பதிலளித்தார்.

error: Content is protected !!