News September 29, 2025
கரூர் துயரம் நடந்தது எப்படி? முதல் முறையாக வெளியானது

கரூரில் 41 உயிர்கள் பறிபோன சம்பவத்தில் காவல்துறையினர் FIR-ல் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரசாரம் நடைபெற்ற வேலுச்சாமிபுரம் சாலைக்கு அருகில் உள்ள கடைகளின் தகர கொட்டகை மற்றும் மரங்களில் கட்சி தொண்டர்கள் அமர்ந்திருந்தபோது பாரம் தாங்காமல் முறிந்து கீழே நின்றிருந்த மக்கள் மீது விழுந்ததால் நெரிசல், மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அப்பாவி மக்கள் 11 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
Similar News
News September 29, 2025
இந்த கோழியை கண்டுபிடிக்க ₹50 கோடி!

ஆந்திரா, தெலங்கானாவில் உள்ள கிழக்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கலிவி கோழி காணப்படுகிறது. அழிந்து வரும் உயிரினமாக இது வகைப்படுத்தப்பட்டுள்ளது. முதன்முதலாக 1848-ல் காணப்பட்ட இப்பறவை இனம், அதன்பின்னர் அழிந்துவிட்டதாக கருதப்பட்டது. ஆனால், 1986-ல் மீண்டும் காணப்பட்ட நிலையில், இதை அடையாளம் கண்டு பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் ₹50 கோடி ஒதுக்கியுள்ளன. பகலில் தூங்கும் இப்பறவை, இரவில் உணவு சேகரிக்கிறது.
News September 29, 2025
தினமும் இதை செய்கிறீர்களா?

தினசரி பழக்கவழக்கங்கள் நீண்ட கால ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில பழக்கவழக்கங்களை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. இவை மன அழுத்தத்தை குறைந்து, மனநிலையை மேம்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆழ்ந்த உறக்கத்துக்கு வழிவகுக்கிறது. இதில் நீங்கள் எதை செய்கிறீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க.
News September 29, 2025
போரில் இந்தியா தோற்ற வரலாறு உண்டு: PCB தலைவர்

ஆசிய கோப்பையில் இந்தியா வென்றதை, விளையாட்டில் ஆபரேஷன் சிந்தூர் என <<17861414>>PM மோடி <<>>பாராட்டி பதிவிட்டு இருந்தார். இதை PCB தலைவர் மொஹ்சின் நக்வி கடுமையாக விமர்சித்துள்ளார். போர் உங்களது பெருமையின் அடையாளமாக இருந்தால், பாகிஸ்தான் கைகளில் இந்தியா தோற்ற பல வரலாறு உண்டு என அவர் தெரிவித்துள்ளார். மேலும், விளையாட்டில் போரை இழுப்பது, விளையாட்டின் உணர்வையே அவமானப்படுத்துவதாகவும் விமர்சித்துள்ளார்.