News May 17, 2024
தமிழ்நாட்டிற்கு வந்த இஸ்ரோ திட்டம் பறிப்போனது எப்படி? (1)

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஏவுதளம் முதலில் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் அமைக்கப்பட இருந்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? 1967 திமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் முதல் ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க அப்போதைய மத்திய அரசு விரும்பியது. அதற்காக இஸ்ரோ தலைவர் விக்ரம் சாராபாய் & சதீஷ் தவானை அன்றைய முதல்வர் அண்ணாவுடன் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்தது.
Similar News
News March 27, 2026
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (27.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 27, 2026
இரட்டை இலை சின்னத்தில் போட்டி: பூவை ஜெகன்மூர்த்தி

NDA கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி நீடிப்பதாக பூவை ஜெகன்மூர்த்தி அறிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், கூடுதல் தொகுதிகள் கேட்டபோது, ஆட்சிக்கு வந்த பிறகு பார்த்து கொள்ளலாம் என அதிமுக தலைமை ஆறுதல் தெரிவித்தது. எனவே, எங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியை ஏற்கிறோம்; வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நானே போட்டியிடுகிறேன் என தெரிவித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 27, 2026
நகைக் கடன் தள்ளுபடி.. வந்தாச்சு UPDATE

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் நகைக் கடன் தள்ளுபடி வாக்குறுதியை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், விரைவில் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாக உள்ளது. இதில், முந்தைய தேர்தலைப் போன்று இம்முறையும் நகைக் கடன் தள்ளுபடி வாக்குறுதி இடம்பெறும் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கடந்த முறையை போன்று 5 சவரன் வரை தள்ளுபடி அறிவிப்பு வெளியாகுமா என்பது கேள்விக்குறிதான்.


