News April 10, 2024
எம்ஜிஆருக்கு ஆர்.எம்.வீரப்பன் முதலாளி ஆனது எப்படி?

எம்ஜிஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஆர்.எம்.வீரப்பனுக்கு எம்ஜிஆர் மாத சம்பளம் கொடுத்து வந்தார். பிறகு எம்ஜிஆரின் தாயார் பெயரில் சத்யா மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார் ஆர்.எம்.வீரப்பன். அதில் எம்ஜிஆரை வைத்து தெய்வத்தாய், இதயக்கனி உள்பட 6 வெற்றிப் படங்களை இயக்கினார். இதனால் சில சமயங்களில் ஆர்.எம்.வீரப்பனை எம்ஜிஆர், “சொல்லுங்க முதலாளி” என ஜாலியாக கிண்டல் செய்வது உண்டு.
Similar News
News January 17, 2026
YT-ல் குழந்தைகளின் நேரத்தை கட்டுபடுத்த வேண்டுமா?

குழந்தைகளின் திரை நேரத்தைக் கட்டுப்படுத்த நேரத்தை பெற்றோர் கட்டுப்படுத்த YouTube புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், குழந்தைகள் YouTube Shorts-க்களை பார்ப்பதற்கான நேர வரம்பை நிர்ணயிக்கவோ அல்லது முழுமையாக தடுக்கவோ முடியும். குழந்தைகள் இந்த வீடியோக்களுக்கு அடிமையாகி வருகிறார்கள் என்ற பெற்றோர்களின் கவலையை தொடர்ந்து YouTube ஜன.14 முதல் இந்த மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
News January 16, 2026
டாஸ்மாக் அசுர வசூல்.. வரலாற்று சாதனை

பொங்கல் பண்டிகையை ஒட்டி TN-ல் கடந்த 2 நாள்களில் ₹517.85 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. 14-ம் தேதி ₹217 கோடிக்கும், பொங்கல் பண்டிகையான நேற்று ₹301 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் மட்டும் ₹98.75 கோடிக்கு விற்றுள்ளது. கடந்தாண்டு பொங்கல் பண்டிகையின்போது 4 நாள்களில் ₹725 கோடிக்கு மது விற்கப்பட்ட நிலையில், இந்தாண்டு 2 நாள்களில் ₹518 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.
News January 16, 2026
முதல்முறையாக Sunday-ல் பங்குச்சந்தை

பிப்ரவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பங்குச் சந்தைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை கணக்கில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வர்த்தக நேரத்தில் (காலை 9:15 முதல் மாலை 3:30 வரை) எந்த மாற்றமும் இருக்காது என்றும், பங்குச் சந்தை ஞாயிற்றுக்கிழமையில் இயங்குவது நாட்டின் வரலாற்றில் முதல்முறை என்றும் நிதி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


