News April 2, 2025
இலங்கை வசம் கச்சத்தீவு சென்றது எப்படி? (1/2)

ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள கச்சத்தீவின் மொத்த பரப்பளவு 285 ஏக்கர். 1974 ஜூன் 21-ல் கச்சத்தீவை அப்போதைய PM இந்திரா காந்தி, தமிழ்நாட்டின் கருத்தைக் கேட்காமல் இலங்கைக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்தார். சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல் இருந்ததால், இலங்கையுடன் நட்பு பாராட்ட அவர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், நீண்ட காலம் இந்தியாவுடன் இருந்த கச்சத்தீவு இலங்கை வசமானது.
Similar News
News January 2, 2026
புத்தாண்டையொட்டி அண்ணா, கருணாநிதிக்கு CM மரியாதை

புத்தாண்டையொட்டி காலையில் இருந்து அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் CM ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் இரவு கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அண்ணா நினைவிடத்திலும் அவர் மலர்தூவி மரியாதை செய்தார். அங்கு குவிந்திருந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கு CM தனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.
News January 2, 2026
CINEMA 360°: கௌதம் கார்த்திக் போஸ்டரை வெளியிட்ட ரஜினி

*நடிகர் ரியோவின் ‘ராம் இன் லீலா’ Making வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. *மோகன் ஜியின் ‘திரௌபதி 2’ படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. *‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. *கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ROOT – Running Out of Time’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரஜினிகாந்த் வெளியிட்டார் .
News January 2, 2026
தமிழகத்தில் பிராய்லர் கோழி உற்பத்தி நிறுத்தம்

தமிழகம் முழுவதும் கறிக்கோழி உற்பத்தி இன்று முதல் நிறுத்தப்படுவதாக கறிக்கோழி பண்ணை வளர்ப்பு அணி மாநில ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம் அறிவித்துள்ளார். வளர்ப்பு கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை கறிக்கோழிகளை வளர்க்க மாட்டோம்; கோழிக்குஞ்சுகளை வாங்க மாட்டோம் என கூறியுள்ளார். இதனால், கோழி உற்பத்தி தடைபடுவதுடன், தட்டுப்பாடு காரணமாக கோழிகளின் விலை உயரவும் வாய்ப்புள்ளது.


