News April 2, 2025
இலங்கை வசம் கச்சத்தீவு சென்றது எப்படி? (1/2)

ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள கச்சத்தீவின் மொத்த பரப்பளவு 285 ஏக்கர். 1974 ஜூன் 21-ல் கச்சத்தீவை அப்போதைய PM இந்திரா காந்தி, தமிழ்நாட்டின் கருத்தைக் கேட்காமல் இலங்கைக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்தார். சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல் இருந்ததால், இலங்கையுடன் நட்பு பாராட்ட அவர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், நீண்ட காலம் இந்தியாவுடன் இருந்த கச்சத்தீவு இலங்கை வசமானது.
Similar News
News December 25, 2025
அன்புமணி ஒரு வழிப்போக்கன்: ராமதாஸ்

டிச.29-ல் சேலத்தில் நடைபெறவுள்ள ராமதாஸால் அறிவிக்கப்பட்ட பாமக பொதுக்குழுவுக்கு அனுமதியில்லை என அன்புமணி தரப்பு கூறியிருந்தது. இந்நிலையில், அன்புமணியை கட்சியில் இருந்தே நீக்கிவிட்டதால், அவர் ஒரு வழிப்போக்கன் சொல்வது போல சொல்லிவிட்டு போகட்டும் என ராமதாஸ் காட்டமாக தெரிவித்துள்ளார். 99% பாமகவினர் தன் பக்கமே உள்ளதால் பொய்யும் புரட்டும் எடுபடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
News December 25, 2025
டிசம்பர் 25: வரலாற்றில் இன்று

*கிறிஸ்துமஸ்
*தேசிய நல்லாட்சி நாள் (Good Governance Day)
*1796 – வேலுநாச்சியார் நினைவுநாள்.
*1924 – அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்தநாள்.
*1968 – கீழ்வெண்மணி படுகொலை.
*1972 – ராஜாஜி நினைவுநாள்.
*1977 – சார்லி சாப்ளின் நினைவுநாள்.
News December 25, 2025
சிவாஜிக்கு பதிலடி கொடுத்த நிதி அகர்வால்

சமீபத்தில் நிதி அகர்வால், ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கித் தவித்த வீடியோ வைரலானது. இதுதொடர்பாக போலீஸார் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, நடிகைகளின் ஆடை பற்றி நடிகர் <<18655275>>சிவாஜி<<>> பேசியது சர்ச்சையானது. இதனையடுத்து அவர் மன்னிப்பும் கோரியிருந்தார். இந்நிலையில், ‘Blaming the victim is called manipulation’ என நிதி அகர்வால் பதிலடி கொடுத்துள்ளார்.


