News April 2, 2025
இலங்கை வசம் கச்சத்தீவு சென்றது எப்படி? (1/2)

ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள கச்சத்தீவின் மொத்த பரப்பளவு 285 ஏக்கர். 1974 ஜூன் 21-ல் கச்சத்தீவை அப்போதைய PM இந்திரா காந்தி, தமிழ்நாட்டின் கருத்தைக் கேட்காமல் இலங்கைக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்தார். சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல் இருந்ததால், இலங்கையுடன் நட்பு பாராட்ட அவர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், நீண்ட காலம் இந்தியாவுடன் இருந்த கச்சத்தீவு இலங்கை வசமானது.
Similar News
News December 25, 2025
தமிழர் என்றால் நாதகவுக்கு ஓட்டு போடுங்கள்: சீமான்

திராவிடம் என்பது தமிழன் அல்லாதவன் வசதியாக வாழவும், ஆளவும் கொண்டு வரப்பட்ட ஒன்று என சீமான் விமர்சித்துள்ளார். நாதக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தங்களை திராவிடர்கள் என்று எண்ணுகிறவர்கள் தனக்கு ஓட்டு போட வேண்டாம் என்றும் கூறியுள்ளார். அதேநேரம், தமிழர்கள் என்று எண்ணுகிற மக்கள் தனக்கு ஓட்டு போடுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார். திராவிட கட்சிகளால் மக்களுக்கு பயனில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
News December 25, 2025
நன்மைகளை வாரி வழங்கும் அகத்திக்கீரை!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின் படி, ➤அகத்திக் கீரையுடன் அரிசி கழுவிய நீரை கலந்து சூப் வைத்து சாப்பிட்டால் இதயம், மூளை, கல்லீரல் வலிமை பெறும். ➤அகத்திக் கீரையை ஆவியில் வேக வைத்து சாறு பிழிந்து, அதில் தேன் கலந்து சாப்பிட்டால் வயிற்றுவலி குணமாகும். ➤அகத்தி கீரையால் உடல் குளிர்ச்சி அடையும், பற்கள் உறுதிபெறும். ➤நோயெதிர்ப்பு சக்தி கூடுவதுடன் உடல் வலுப்பெறும். SHARE IT.
News December 25, 2025
உன்னாவ்: மேல்முறையீடு செய்ய CBI திட்டம்

நாட்டையே உலுக்கிய உன்னாவ் பாலியல் வழக்கில் கைதான கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பாஜக Ex MLA குல்தீப் சிங் செங்கராலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை டெல்லி கோர்ட் ரத்து செய்து ஜாமினும் வழங்கியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு <<18663915>>காங்.,<<>> உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து CBI மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


