News April 2, 2025
இலங்கை வசம் கச்சத்தீவு சென்றது எப்படி? (1/2)

ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள கச்சத்தீவின் மொத்த பரப்பளவு 285 ஏக்கர். 1974 ஜூன் 21-ல் கச்சத்தீவை அப்போதைய PM இந்திரா காந்தி, தமிழ்நாட்டின் கருத்தைக் கேட்காமல் இலங்கைக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்தார். சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல் இருந்ததால், இலங்கையுடன் நட்பு பாராட்ட அவர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், நீண்ட காலம் இந்தியாவுடன் இருந்த கச்சத்தீவு இலங்கை வசமானது.
Similar News
News November 24, 2025
தினமும் சிரித்தால் இவ்வளவு நன்மைகளா!

இன்றைய பரபரப்பு வாழ்க்கையில் மன அழுத்தம், கவலை, மனச்சோர்வு போன்றவற்றுக்கு சிறந்த மருந்து சிரிப்பு தான் என்கின்றனர் மனநல மருத்துவர்கள். தினமும் 15 நிமிடங்களுக்கு வாய்விட்டு சிரிப்பது மன அழுத்தத்தை குறைப்பது, டைப்-2 நீரிழிவு & BP-யை கட்டுக்குள் வைப்பது, இதயத்தை காப்பது என உடலுக்கும் மனதுக்கும் பல நன்மைகள் தரும். இயற்கையான வலி நிவாரணியாக செயல்படும் சிரிப்பு, உங்களை இளமையாகவும் தோன்றச் செய்யும்.
News November 24, 2025
மதுரை, கோவைக்கு மெட்ரோ தேவையில்லை: காங் MP

TN-ல் சென்னையை தவிர்த்து வேறு எந்த ஊருக்கும் மெட்ரோ ரயில் தேவையில்லை என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். மதுரை, கோவை மெட்ரோ குறித்த கேள்விக்கு அவர், டெல்லி, மும்பை, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் மெட்ரோ ரயில் எடுபடும் என்றும் டயர் 2 நகரங்களுக்கு அத்திட்டம் எடுபடாது எனவும் பேசியுள்ளார். இந்தூர், ஆக்ரா போன்ற நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டமானது Utter Flop ஆகிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
News November 24, 2025
ராசி பலன்கள் (24.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


