News April 2, 2025
இலங்கை வசம் கச்சத்தீவு சென்றது எப்படி? (1/2)

ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள கச்சத்தீவின் மொத்த பரப்பளவு 285 ஏக்கர். 1974 ஜூன் 21-ல் கச்சத்தீவை அப்போதைய PM இந்திரா காந்தி, தமிழ்நாட்டின் கருத்தைக் கேட்காமல் இலங்கைக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்தார். சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல் இருந்ததால், இலங்கையுடன் நட்பு பாராட்ட அவர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், நீண்ட காலம் இந்தியாவுடன் இருந்த கச்சத்தீவு இலங்கை வசமானது.
Similar News
News November 24, 2025
வெந்நீரில் கால் வைப்பதால் இத்தனை நன்மைகளா?

தினமும் 15 நிமிடங்கள் வரை வெதுவெதுப்பான நீரில் கால்களை வைத்தால் சில நன்மைகள் ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.
*மன அழுத்தம் குறையும்.
*ரத்த ஓட்டம் சீராகும்.
*தலைவலி குறையும்.
*தசைவலி, தசைப்பிடிப்பு இல்லாமல், தசைகளை தளர்வோடு வைத்திருக்கும்.
*பாத வெடிப்புகள் இருந்தால், அவை சரியாகும்.
உங்கள் உறவுகளுக்கும் ஷேர் பண்ணுங்க.
News November 24, 2025
SIR-க்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தவெக மனு

SIR-க்கு ஆதரவாக பாஜக, அதிமுக பேசிவரும் நிலையில், திமுக, அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் SIR பணிகளில் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவதாக கூறி, தவெக தரப்பில் SC-ல் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, SIR பணிகளால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்களது வாக்குரிமையை இழக்க வாய்ப்புள்ளதாக விஜய் கூறியிருந்தார்.
News November 24, 2025
ஷேக் ஹசீனாவை நாடு கடத்துங்கள்: வங்கதேசம்

மாணவர் போராட்டத்தின்போது நடத்தப்பட்ட படுகொலைகளை தடுக்க தவறியதாக, வங்கதேச Ex PM ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஹசீனாவை நாடு கடத்தக் கோரி, முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசு அதிகாரப்பூர்வமாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. ஏற்கெனவே, தீர்ப்பை அடுத்து ஆக்கப்பூர்வமான முடிவுகள் எடுக்கப்படும் என இந்தியா கூறியிருந்தது.


