News April 2, 2025
இலங்கை வசம் கச்சத்தீவு சென்றது எப்படி? (1/2)

ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள கச்சத்தீவின் மொத்த பரப்பளவு 285 ஏக்கர். 1974 ஜூன் 21-ல் கச்சத்தீவை அப்போதைய PM இந்திரா காந்தி, தமிழ்நாட்டின் கருத்தைக் கேட்காமல் இலங்கைக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்தார். சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல் இருந்ததால், இலங்கையுடன் நட்பு பாராட்ட அவர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், நீண்ட காலம் இந்தியாவுடன் இருந்த கச்சத்தீவு இலங்கை வசமானது.
Similar News
News December 11, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. மெசேஜ் வந்துருச்சா..!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைந்தவர்களுக்கு நாளை முதல் ₹1,000 டெபாசிட் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்து அவர்களது செல்போன் எண்ணுக்கு அரசு சார்பில் மெசேஜ் அனுப்பப்பட்டு வருகிறது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், அதற்கான காரணம் மெசேஜ்ஜில் தெரிவிக்கப்பட்டிருக்கும். அதன்படி, குடும்பத் தலைவிகள் மேல்முறையீடு செய்யலாம். உங்களுக்கு மெசேஜ் வந்துருச்சா?
News December 11, 2025
T20 WC டிக்கெட்: சற்றுநேரத்தில் புக்கிங் தொடக்கம்

இந்தியாவில் டி20 உலகக் கோப்பை தொடர், பிப்.7-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த டிக்கெட் புக்கிங், இன்று மாலை 6:45 மணிக்கு தொடங்குவதாக ICC கூறியுள்ளது. லீக் போட்டிகளுக்கான அடிப்படை டிக்கெட் விலை ₹100-ல் இருந்து ஆரம்பிக்கிறது. கொல்கத்தா, சென்னை, அகமதாபாத், மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் போட்டி நடைபெறுகிறது. நீங்க ஸ்டேடியத்தில் லைவ் மேட்ச் பார்த்தது உண்டா?
News December 11, 2025
ஒரு பெயர் நீக்கப்பட்டாலும் விடமாட்டேன்: மம்தா பானர்ஜி

2026 தேர்தலை ஒட்டி, மே.வங்கத்திலும் SIR பணி நடைபெறுகிறது. இந்நிலையில் SIR மூலம் தகுதியான ஒருவர் பெயர் நீக்கப்பட்டாலும் தர்ணா நடத்துவேன் என்று மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார். இந்த பணிக்கு BJP-க்கு சாதகமான அதிகாரிகளையே ECI அனுப்புவதாக குற்றஞ்சாட்டிய அவர், தான் இன்னும் SIR படிவத்தை நிரப்பவில்லை என்றார். கலவரக்காரர்களின் கட்சிக்கு என் குடியுரிமையை நிரூபிக்க வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பினார்.


