News April 2, 2025
இலங்கை வசம் கச்சத்தீவு சென்றது எப்படி? (1/2)

ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள கச்சத்தீவின் மொத்த பரப்பளவு 285 ஏக்கர். 1974 ஜூன் 21-ல் கச்சத்தீவை அப்போதைய PM இந்திரா காந்தி, தமிழ்நாட்டின் கருத்தைக் கேட்காமல் இலங்கைக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்தார். சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல் இருந்ததால், இலங்கையுடன் நட்பு பாராட்ட அவர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், நீண்ட காலம் இந்தியாவுடன் இருந்த கச்சத்தீவு இலங்கை வசமானது.
Similar News
News December 7, 2025
திமுகவில் கூண்டோடு இணைந்தனர்

2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியில் அதிமுக, திமுக, தவெக போன்ற கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர், அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்ற அமைச்சர், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.
News December 7, 2025
பதற்றத்தை ஏற்படுத்தும் பாஜக, RSS: கருணாஸ்

தமிழர்களின் மத நல்லிணக்கத்தை பாஜக, RSS கலவரமாக மாற்றுகின்றன என்று கருணாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பிரித்தாளும் சூழ்ச்சிக்கு தமிழ் மக்கள் எப்போதும் அடிபணிய மாட்டார்கள் எனக்கூறிய அவர், தீபம் ஏற்றும் தூணை விட்டுவிட்டு, ஆங்கிலேயர் வைத்த கல்லை தீபத்தூண் என்று அழிச்சாட்டியம் செய்கின்றனர் எனவும் விமர்சித்துள்ளார்.
News December 7, 2025
குளிர்காலத்திலும் முகம் பளபளக்க ‘4’ டிப்ஸ்

★குளிர்காலத்திலும் சன்ஸ்கிரீன் பயன்படுவது, சருமத்தை பளபளப்பாக்கும் ★சரும ஆரோக்கியத்திற்கு ஆரஞ்சு, திராட்சை போன்ற வைட்டமின் சி அதிகமுள்ள பழங்களை சாப்பிடவும் ★அதிகமாக குளிர்கிறது என்று, ஓவர் சூடான நீரில் குளிக்க வேண்டாம். அது சருமத்தை வறட்சியாக்கும் ★உடலில் நீரிழப்பு ஏற்படும்போது சருமம் வறண்டு விடும். எனவே, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளவும். உங்களுக்கு தெரிஞ்ச சில டிப்ஸ சொல்லுங்க.


