News April 2, 2025

இலங்கை வசம் கச்சத்தீவு சென்றது எப்படி? (1/2)

image

ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள கச்சத்தீவின் மொத்த பரப்பளவு 285 ஏக்கர். 1974 ஜூன் 21-ல் கச்சத்தீவை அப்போதைய PM இந்திரா காந்தி, தமிழ்நாட்டின் கருத்தைக் கேட்காமல் இலங்கைக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்தார். சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல் இருந்ததால், இலங்கையுடன் நட்பு பாராட்ட அவர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், நீண்ட காலம் இந்தியாவுடன் இருந்த கச்சத்தீவு இலங்கை வசமானது.

Similar News

News December 23, 2025

அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. அரசு அறிவிப்பு

image

பள்ளி மாணவர்களின் உற்சாகத்துக்கு இன்று எல்லையே கிடையாது. ஏனென்றால், 1 – 12 வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் இன்றுடன் அரையாண்டுத் தேர்வுகள் நிறைவடைகின்றன. நாளை (டிச.24) முதல் ஜன.4 வரை 12 நாள்கள் அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜன.5 அன்றே பள்ளிகள் திறக்கும். எனவே, விடுமுறையை கொண்டாட முன்கூட்டியே திட்டமிடுங்கள். உங்களுக்காக <<18631046>>சிறப்பு<<>> பஸ்கள், ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News December 23, 2025

கருவறை வாயிலில் இருப்பவர்கள் யார் தெரியுமா?

image

கோயில் கருவறைக்கு வெளியே இருபுறமும் துவாரபாலகர்கள் இருப்பார்கள். ஆகம விதிப்படி, மூலஸ்தானத்தின் வாயில் காப்பவர்கள் இவர்கள். பக்தர்கள் முதலில் துவாரபாலகர்களை நமஸ்கரித்து பின்னர், தெய்வத்தை தரிசிக்க வேண்டும் என்பது ஆலய தரிசன விதி. விஷ்ணு ஆலயங்களில் ஜயனும், விஜயனும், சிவாலயங்களில் சண்டனும், பிரசண்டனும் துவாரபாலகர்களாக உள்ளனர். அம்மன் கோயிலில் துவாரபாலகிகளாக ஹரபத்ரா, சுபத்ரா உள்ளனர்.

News December 23, 2025

ஜெயிலர் 2 படத்தில் கேமியோ சற்று அதிகம்: சிவராஜ்குமார்

image

‘ஜெயிலர் 2’ படத்தில் தான் நடிப்பதை சிவராஜ்குமார் உறுதி செய்துள்ளார். ஒரு நாள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டதாகவும், ஜனவரிக்குள் தனது பகுதி முடிவடையும் என்றும் அப்டேட் கொடுத்துள்ளார். முந்தைய பாகத்தின் தொடர்ச்சியாகவே இப்படம் உருவாகி வருவதாகவும், இதில் தனது ரோலின் நீளம் சற்று அதிகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். டிஸ்யூ சம்பவக்காரனாக சிவராஜ்குமாரை பார்க்க ரெடியா?

error: Content is protected !!