News April 2, 2025

இலங்கை வசம் கச்சத்தீவு சென்றது எப்படி? (1/2)

image

ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள கச்சத்தீவின் மொத்த பரப்பளவு 285 ஏக்கர். 1974 ஜூன் 21-ல் கச்சத்தீவை அப்போதைய PM இந்திரா காந்தி, தமிழ்நாட்டின் கருத்தைக் கேட்காமல் இலங்கைக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்தார். சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல் இருந்ததால், இலங்கையுடன் நட்பு பாராட்ட அவர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், நீண்ட காலம் இந்தியாவுடன் இருந்த கச்சத்தீவு இலங்கை வசமானது.

Similar News

News January 3, 2026

எதில் அதிக நேரம் செலவாகிறது?

image

OTT, Reels உள்ளிட்டவைகளில் நேரம் செலவிடுவது அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக, இந்தியாவின் திரை பயன்பாட்டு நுகர்வு முறைகளை பற்றி தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதில், 2025-ல் பார்வையாளர்கள் எதில் தங்களது நேரத்தை செலவிடுகின்றனர் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நீங்கள் எதில் நேரத்தை செலவிடுகிறீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க.

News January 3, 2026

கோயிலில் மதவெறியை வளர்க்கக் கூடாது: சேகர்பாபு

image

கன்னியாகுமரி கோயில் நிகழ்ச்சியில் அமைச்சர் <<18742042>>சேகர்பாபு<<>> பக்தர்களை திட்டிய விவகாரம் பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், அமைதி காக்கும் இடத்தில் மனிதநேயத்தை வளர்க்க வேண்டும், மதவெறியை வளர்க்கக் கூடாது என சேகர்பாபு தெரிவித்துள்ளார். பாரத் மாதா கி ஜே என்ற முழக்கத்தை கோயிலுக்கு வெளியே சொல்லட்டும் எனவும், ஆன்மிகமும், பக்தியும் அறத்தைதான் உணர்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News January 3, 2026

‘அரசன்’ படத்தில் 3 கெட்டப்களில் நடிக்கும் சிம்பு!

image

அரசன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 11 நாள்களாக நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு, சென்னையில் வரும் 20-ம் தேதி தொடங்க உள்ளதாகவும், 1980, 1992, 1995 காலகட்டங்களில் கதை நிகழ்வதால், சிம்பு 3 கெட்டப்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மதுரையைச் சேர்ந்த கபடி வீரர் ஒருவர், சென்னையில் கேங்ஸ்டராக மாறுவதை சுற்றி கதை நகர்வதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!