News April 2, 2025

இலங்கை வசம் கச்சத்தீவு சென்றது எப்படி? (1/2)

image

ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள கச்சத்தீவின் மொத்த பரப்பளவு 285 ஏக்கர். 1974 ஜூன் 21-ல் கச்சத்தீவை அப்போதைய PM இந்திரா காந்தி, தமிழ்நாட்டின் கருத்தைக் கேட்காமல் இலங்கைக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்தார். சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல் இருந்ததால், இலங்கையுடன் நட்பு பாராட்ட அவர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், நீண்ட காலம் இந்தியாவுடன் இருந்த கச்சத்தீவு இலங்கை வசமானது.

Similar News

News December 22, 2025

இந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள்.. காஜல் போஸ்ட்!

image

மௌனம் உங்களை காப்பாற்றாது, இந்துக்களே விழித்து கொள்ளுங்கள் என காஜல் அகர்வால் பதிவிட்டுள்ளார். அவரது இன்ஸ்டாவில், வங்கதேசத்தில் எரித்து கொல்லப்பட்ட தீபு சந்திரதாஸ் என்பவர் குறித்த போட்டோவை பகிர்ந்து, அதில், அனைத்து கண்களும் வங்காளதேச இந்துக்களின் மீது எனவும் குறிப்பிட்டுள்ளார். காஜல் அகர்வாலின் இப்பதிவு வைரலாகியுள்ளது. தொடர்ந்து வங்கதேசத்தில் கலவரங்களும், மதம் தொடர்பான மோதல்களும் வெடித்துள்ளன.

News December 22, 2025

தமிழ்நாட்டிற்கு தனி கேரக்டர் உள்ளது: DCM உதயநிதி

image

மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமைக்கு எதிரான பாசிச கூட்டணியை மக்கள் நிச்சயம் முறியடிப்பார்கள் என உதயநிதி கூறியுள்ளார். தமிழ்நாட்டுக்கு தனி கேரக்டர் இருப்பதாக கூறிய அவர், கிறிஸ்துமஸுக்கு இஸ்லாமியர்களுக்கு கேக் அனுப்புவதும், ரம்ஜானுக்கு பிரியாணி வந்துவிட்டதா என பார்ப்பதும் தான் TN-ன் தனி குவாலிட்டி என பேசியுள்ளார். மேலும், சிறுபான்மையினருக்கு எதிரான சூழ்ச்சிகள் TN-ல் வெல்லாது எனவும் தெரிவித்துள்ளார்.

News December 22, 2025

சாதி சான்றிதழ் பெற விண்ணப்பிப்பது எப்படி?

image

✱TNeGA போர்ட்டலில் Citizen login-ஐ கிளிக் செய்யவும் ✱Department -> Revenue Department-ஐ தேர்வு செய்து, பின்னர், REV 101 community certificate-ஐ கிளிக் செய்யவும் ✱அதில், ஆதாரை கொடுத்து CAN நம்பரை பெறவும் ✱உங்களின் தகவல்களை சரிபார்த்து, பெற்றோரின் சாதி விவரங்களை நிரப்பவும் ✱ஆவணங்களை அப்லோட் செய்து, self declaration form-ல் sign செய்யவும் ✱கட்டணத்தை செலுத்தினால் 10 நாளில் சான்றிதழ் கிடைக்கும்.

error: Content is protected !!