News April 2, 2025

இலங்கை வசம் கச்சத்தீவு சென்றது எப்படி? (1/2)

image

ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள கச்சத்தீவின் மொத்த பரப்பளவு 285 ஏக்கர். 1974 ஜூன் 21-ல் கச்சத்தீவை அப்போதைய PM இந்திரா காந்தி, தமிழ்நாட்டின் கருத்தைக் கேட்காமல் இலங்கைக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்தார். சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல் இருந்ததால், இலங்கையுடன் நட்பு பாராட்ட அவர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், நீண்ட காலம் இந்தியாவுடன் இருந்த கச்சத்தீவு இலங்கை வசமானது.

Similar News

News January 2, 2026

RO-KO விளையாட அதிக ODI நடத்த வேண்டும்: பதான்

image

IND vs NZ இடையே 3 போட்டிகளைக் கொண்ட ODI தொடர், வரும் 11-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், 5 போட்டிகளை கொண்ட தொடரை ஏன் நடத்தக் கூடாது என இர்ஃபான் பதான் கேள்வி எழுப்பியுள்ளார். முத்தரப்பு, நான்கு தரப்பு ODI தொடர்களை நடத்தலாமே எனவும், RO-KO தொடர்ந்து விளையாட, அதிக ODI-களை BCCI நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தியா கடைசியாக 2019-ல் 5 போட்டிகளைக் கொண்ட ODI தொடரில் விளையாடியது.

News January 2, 2026

‘பொங்கல் பரிசாக ₹5,000 வழங்குக’.. நயினார் அறிக்கை

image

பொங்கல் பரிசு விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பொங்கலுக்கு ₹5,000 வழங்குவார்கள் என எதிர்பார்த்துவரும் நிலையில், மக்களுக்கு திமுக அரசு ஏமாற்றத்தை பரிசளித்துள்ளதாக சாடியுள்ளார். ஆட்சி முடியும் தருவாயிலாவது போங்காட்டத்தை ஒதுக்கி வைத்து, ₹5,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசை சரிவர வழங்குமாறு CM ஸ்டாலினுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார். உங்க கருத்து?

News January 2, 2026

AI எங்கிருந்து தகவல்களை பெறுகிறது தெரியுமா?

image

AI என்பது மனிதர்களைப் போல சிந்தித்து செயல்படக் கூடிய கணினி தொழில்நுட்பமாகும். ஆனால் AI-க்கு மனிதர்களைப் போல நேரடியாக அனுபவமோ அல்லது உணர்வோ கிடையாது. அது செயல்படுவதற்குத் தேவையான தகவல்களை பல்வேறு தளங்களிலிருந்து பெறுகிறது. அவை என்னென்ன தளங்கள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

error: Content is protected !!