News April 2, 2025

இலங்கை வசம் கச்சத்தீவு சென்றது எப்படி? (1/2)

image

ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள கச்சத்தீவின் மொத்த பரப்பளவு 285 ஏக்கர். 1974 ஜூன் 21-ல் கச்சத்தீவை அப்போதைய PM இந்திரா காந்தி, தமிழ்நாட்டின் கருத்தைக் கேட்காமல் இலங்கைக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்தார். சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல் இருந்ததால், இலங்கையுடன் நட்பு பாராட்ட அவர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், நீண்ட காலம் இந்தியாவுடன் இருந்த கச்சத்தீவு இலங்கை வசமானது.

Similar News

News November 27, 2025

BREAKING: அதிமுகவில் இருந்து நீக்கம்.. இபிஎஸ் அடுத்த அதிரடி

image

சேலம் ஆத்தூர் அருகே அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்டச் இணைச் செயலாளரான சங்கர், தூய்மைப் பணியாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். இது அரசியல் ரீதியாக பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்நிலையில், கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சங்கர் நீக்கப்படுவதாக EPS அறிவித்துள்ளார்.

News November 27, 2025

தித்வா புயல்: பெயருக்கு இதுதான் அர்த்தமா..!

image

வங்க கடலில் உருவாக உள்ள புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரைத்த ‘தித்வா’ என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. “Detwah Lagoon” என்பது யேமனின் Socotra தீவில் உள்ள குளத்தை குறிக்கிறது. அடுத்த 12 மணிநேரத்தில் புயலாக மாறவிருக்கும் இது, வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா பகுதிகளை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறதாம். இதனால் சென்னை உள்பட வட தமிழகத்தில் கனமழை பெய்யும் என IMD எச்சரித்துள்ளது.

News November 27, 2025

இளையராஜா எப்படி பாதிக்கப்படுகிறார்? HC

image

‘Dude’ படத்தில் அனுமதியின்றி பயன்படுத்திய தனது பாடலை நீக்க கோரி இளையராஜா, சென்னை HC-ல் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில், 30 வருடங்களுக்கு முன்பு வெளியான பாடல்களை கேட்டு ரசிப்பதால் இளையராஜா எவ்வாறு பாதிக்கப்படுகிறார் என HC கேள்வி எழுப்பியது. பாடலுக்கான உரிமை எங்களிடம் உள்ளதாக இளையராஜா தரப்பில் வாதிடப்பட்டது. பின்னர், இம்மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் HC ஒத்திவைத்தது.

error: Content is protected !!