News April 2, 2025
இலங்கை வசம் கச்சத்தீவு சென்றது எப்படி? (1/2)

ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள கச்சத்தீவின் மொத்த பரப்பளவு 285 ஏக்கர். 1974 ஜூன் 21-ல் கச்சத்தீவை அப்போதைய PM இந்திரா காந்தி, தமிழ்நாட்டின் கருத்தைக் கேட்காமல் இலங்கைக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்தார். சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல் இருந்ததால், இலங்கையுடன் நட்பு பாராட்ட அவர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், நீண்ட காலம் இந்தியாவுடன் இருந்த கச்சத்தீவு இலங்கை வசமானது.
Similar News
News December 28, 2025
மீண்டும் அணிக்கு திரும்பும் ஸ்ரேயஸ்

காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த <<18347826>>ஸ்ரேயஸ்<<>>, மீண்டும் அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் பூரண குணமடைந்துவிட்டதாக BCCI வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால், வரும் ஜனவரி 3 மற்றும் 6-ம் தேதிகளில் நடைபெற உள்ள விஜய் ஹசாரே டிராபி போட்டிகளில் மும்பை அணிக்காக அவர் விளையாட உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து நியூசி.,க்கு எதிரான ODI தொடரில் இந்திய அணியில் இடம்பெறுவார் என்றும் கூறப்படுகிறது.
News December 28, 2025
நாளை காலை வீட்டை விட்டு வெளியே வராதீங்க

தமிழகத்தில் நாளை(டிச.29) உறைபனி ஏற்பட வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி, கொடைக்கானலில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பனிமூட்டம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், காலை 6 முதல் 8 மணி வரை வாகனங்களில் வெளியே செல்வதை தவிருங்கள். உங்கள் ஊரில் பனியின் தாக்கம் எப்படி இருக்கிறது?
News December 28, 2025
மேனேஜரை அதிரடியாக நீக்கிய விஷால்

தனது மேனேஜரும், விஷால் மக்கள் நல இயக்கத்தில் செயலாளருமான ஹரிகிருஷ்ணனை பதவியில் இருந்து நீக்கி நடிகர் விஷால் அறிவித்துள்ளார். தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி, தேவி சமூக அறக்கட்டளை மற்றும் விஷால் மக்கள் நல இயக்கம் ஆகியவற்றுடன் எந்த விதத்திலும் ஹரிகிருஷ்ணன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்புடையவர் அல்ல. எனவே எந்தவொரு விஷயத்திலும் அவரை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.


