News April 2, 2025
இலங்கை வசம் கச்சத்தீவு சென்றது எப்படி? (1/2)

ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள கச்சத்தீவின் மொத்த பரப்பளவு 285 ஏக்கர். 1974 ஜூன் 21-ல் கச்சத்தீவை அப்போதைய PM இந்திரா காந்தி, தமிழ்நாட்டின் கருத்தைக் கேட்காமல் இலங்கைக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்தார். சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல் இருந்ததால், இலங்கையுடன் நட்பு பாராட்ட அவர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், நீண்ட காலம் இந்தியாவுடன் இருந்த கச்சத்தீவு இலங்கை வசமானது.
Similar News
News December 22, 2025
குளிர்காலத்தில் அதிகமாக முடி உதிர்வது ஏன்?

வெயில் காலத்தைவிட குளிர்காலத்தில் நாம் தலைமுடி வறட்சி, அரிப்பு, உதிர்வு போன்றவற்றை அதிகமாகவே எதிர்கொள்வோம். ஏனெனில் வெயில் காலத்தில் தாகம் எடுத்து அடிக்கடி தண்ணீர் குடிப்போம். குளிர்காலத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிக்க தவறுவதால் உடலில் நீர்ச்சத்து குறைகிறது. அதேபோல காற்றில் ஈரப்பதம் குறைவதால் Scalp எளிதில் வறண்டு முடி கொட்டுகிறது. இதைத் தடுக்க 2-3 லிட்டர் தண்ணீர் தவறாமல் குடிக்கவும்.
News December 22, 2025
பியூஷ் கோயலுக்கு நாளை விருந்தளிக்கும் இபிஎஸ்

தமிழகம் வரும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு EPS தனது வீட்டில் விருந்து அளிக்க உள்ளார். 2026 பேரவை தேர்தல் கூட்டணி, பாஜகவுக்கான தொகுதி பங்கீடு குறித்து பியூஷ் கோயல், EPS இருவரும் ஆலோசனை நடத்த உள்ளனர். 2024 தேர்தலுக்கு பிறகு NDA கூட்டணியில் மீண்டும் இணைந்த EPS, தனது வீட்டில் அமித்ஷாவுக்கு விருந்து அளித்திருந்தார். நாளை நடைபெறவுள்ள விருந்தில் பாஜகவுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்படவுள்ளதாம்.
News December 22, 2025
BREAKING: ஜன.6-ம் தேதி ஸ்டிரைக் அறிவிப்பு

பழைய ஓய்வூதியம் தொடர்பாக அரசு ஊழியர்களுடன், அரசு சார்பில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உத்தரவாதமும் வழங்கப்படவில்லை என ஜாக்டோ ஜியோ தலைவர் அமிர்தகுமார் தெரிவித்துள்ளார். மேலும் ஜன. 6-ம் தேதி முதல் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.


