News April 2, 2025
இலங்கை வசம் கச்சத்தீவு சென்றது எப்படி? (1/2)

ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள கச்சத்தீவின் மொத்த பரப்பளவு 285 ஏக்கர். 1974 ஜூன் 21-ல் கச்சத்தீவை அப்போதைய PM இந்திரா காந்தி, தமிழ்நாட்டின் கருத்தைக் கேட்காமல் இலங்கைக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்தார். சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல் இருந்ததால், இலங்கையுடன் நட்பு பாராட்ட அவர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், நீண்ட காலம் இந்தியாவுடன் இருந்த கச்சத்தீவு இலங்கை வசமானது.
Similar News
News January 8, 2026
JUSTIN : தமிழ் நடிகர் அதிரடி கைது

பண மோசடி வழக்கில் நடிகர் அஜய் வாண்டையார் கைது செய்யப்பட்டுள்ளார். Ex MLA ஒருவரிடம் ₹3.5 கோடி பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் இன்று பெங்களூரு விமான நிலையத்தில் அஜய் வாண்டையாரை கைது செய்த போலீசார், சென்னை அழைத்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, இதுபோன்ற வழக்கில் சிக்கியதால், இவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News January 8, 2026
நேரு சிறை செல்வதை இனி தடுக்க முடியாது: அருண்ராஜ்

₹1,020 கோடி ஊழல் விவகாரத்தில் அமைச்சர் நேரு சிறைக்கு செல்வதை இனி யாராலும் தடுக்க முடியாது என TVK-வின் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இத்தனை நாள்களாக இதை மூடி மறைக்கப் பார்த்தீர்கள்; ஆனால் இனி நடமாட முடியாது என்ற நிலை வந்தவுடன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளீர்கள் என்று சாடிய அவர், அமலாக்கத்துறையே நேரடியாகத் தூக்கி உள்ளே வைத்துவிடும் என்ற பயத்தினால் இந்த விசாரணை உத்தரவா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News January 8, 2026
தீர்ப்பளித்த நீதிபதிக்கு அச்சுறுத்தல்: கவர்னர் ரவி

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாட்டை கவர்னர் ரவி காட்டமாக விமர்சித்துள்ளார். தீர்ப்பளித்த நீதிபதி அச்சுறுத்தப்பட்டது போன்ற சம்பவம் 75 ஆண்டுகால வரலாற்றில் நடைபெற்றதில்லை என்றும் சாடியுள்ளார். இது அரசியலமைப்பை குலைப்பதற்கான முயற்சி என குறிப்பிட்ட ரவி, HC உத்தரவில் மகிழ்ச்சி இல்லையென்றால் SC செல்லுங்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார். உங்கள் கருத்து என்ன?


