News March 3, 2025
யூடியூப் பார்த்து கொலை.. பலே இளைஞர் சிக்கியது எப்படி?

20 ஏக்கர் நிலத்திற்காக யூடியூப் பார்த்து பங்காளியை தீர்த்துக்கட்டிய பலே இளைஞர் 3 மாதங்களுக்கு பிறகு சிக்கியுள்ளார். கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜம்புகுட்டப்பட்டியை சேர்ந்த சக்திவேல், 3 மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்தார். இந்த வழக்கில் போலீசார் துப்பு கிடைக்காமல் திணறி வந்த நிலையில், உறவினர் சபரி, யூடியூப் பார்த்து 6 மாதங்களாக திட்டமிட்டு இந்த கொலையை அரங்கேற்றியது அம்பலமாகியுள்ளது.
Similar News
News March 3, 2025
இயர்போன் பயன்படுத்துவோரா நீங்கள்!

அதிக ஒலியிடும் சாதனங்களை பயன்படுத்தினால் செவித்திறன் பாதிக்கும் என பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. சாதாரண ஒலி அளவில் இருந்தாலும், புளுடூத் இயர்போன், ஹெட்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். தேவைப்பட்டால் 50 டெசிபல் ஒலிக்கும் குறைவாக இருக்கும் இயர்போனை பயன்படுத்தவும். இயர்போனை 2 மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஹெட்போன் பயன்பாட்டை குறைக்க நீங்கள் என்ன செய்வீங்க கமெண்ட் பண்ணுங்க
News March 3, 2025
போப் உடல்நிலை எப்படி இருக்கிறது? வாடிகன் விளக்கம்

நிமோனியா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கத்தோலிக்க மதகுரு போப் பிரான்சிஸ்-க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது வெளியாகியுள்ள மருத்துவ அறிக்கையில், 88 வயதான போப் இரவு முழுவதும் நன்றாகத் தூங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து சீராக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
News March 3, 2025
சர்ச்சைக்கு ஒரே வரியில் பதிலளித்த ரோகித்

CT தொடரின் அரையிறுதிப்போட்டியில் நாளை IND – AUS மோதுகின்றன. இதற்கிடையில் ஒரே மைதானத்தில் இந்திய அணி அனைத்துப் போட்டிகளையும் விளையாடுவதும், இதனால் தான் அரையிறுதிக்கு முன்னேறியதாகவும் சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து ரோகித் சர்மா, அரையிறுதியில் எந்த மைதானத்தில் விளையாடப் போகிறோம் என எங்களுக்கே தெரியாது. இந்த துபாய் கிரவுண்டு எங்களுக்கும் புதிது தான், Home Ground கிடையாது என விளக்கமளித்தார்.