News March 19, 2025
வீடு வீடாக ரேஷன் விநியோகம் குறித்து ஆய்வு: சக்கரபாணி

வீடு வீடாக சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்வது குறித்து ஆய்வு செய்யப்படும் என சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஆந்திரா, கர்நாடகாவில் உள்ளதுபோல், தமிழகத்திலும் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்குவது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இது குறித்து உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க..
Similar News
News March 19, 2025
RRB தேர்வு ரத்து… தலைவர்கள் கண்டனம்..

கடைசி நேரத்தில் <<15812108>>RRB <<>>தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தேர்வர்களை அலைக்கழித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தேர்வர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
News March 19, 2025
ஏப்.1 முதல் UPI கணக்குகள் முடக்கம்!

ஏப்ரல் 1 முதல் சில அதிரடி நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்ளவுள்ளன. அந்த வகையில், GPAY, PHONEPE, PAYTM போன்ற UPI ஆப்களுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்கள் நீண்டகாலமாக செயல்படாமல் இருந்தால், அந்த UPI கணக்குகள் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, UPI உடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்கள் பயன்பாட்டில் உள்ளதா என்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News March 19, 2025
நாய்க்கடியால் உயிரிழந்தால் இழப்பீடு: அரசு அறிவிப்பு

நாய்க்கடியால் உயிரிழப்பு ஏற்பட்டால், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்க CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, நாய்க்கடியால் மாடு இறந்தால் ₹37,500, ஆடு இறந்தால் ₹6,000, கோழி இறந்தால் ₹200 இழப்பீடு வழங்கப்படும் என்றார். இதுவரை தெருநாய் கடித்து உயிரிழந்த 1,149 பிராணிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.