News February 22, 2025
செவ்வாய் கிரகத்தில் வீடு: சென்னை ஐஐடி சாதனை

செவ்வாய் கிரகத்தில் வசிக்க முடியுமா? என்ற ஆய்வுகளில் அமெரிக்காவும், இந்தியாவும் தீவிரமாக இறங்கி இருக்கின்றன. அதற்கான சாத்தியக்கூறுகள் அமைந்தால் அங்கு கட்டுமானங்களை எழுப்ப பிரத்யேக கான்கிரீட்களை உருவாக்கி சாதித்திருக்கிறது சென்னை ஐஐடி. நீரின்றி தயாரிக்கப்பட்டதுதான் இதன் தனித்துவமே. இதை வைத்து செவ்வாயில் வீடு கட்டினால் எப்படி இருக்கும்? அதை AI தொழில்நுட்பம் நம் கண்களுக்கு விருந்தளித்திருக்கிறது.
Similar News
News February 22, 2025
முன்னாள் ராணுவ துணைத் தளபதி காலமானார்

இந்திய ராணுவ முன்னாள் துணைத் தளபதி மோதி தார் காலமானார். 1995 முதல் 1996 வரை துணை ராணுவத் தளபதியாக பதவி வகித்துள்ள அவர், அதற்கு முன்பு தென்பிராந்திய படைகளின் தளபதியாக 1994-1995 வரை இருந்துள்ளார். 1965 பாேர், 1971 இந்தியா-பாகிஸ்தான் போரில் முக்கிய பங்கு வகித்துள்ளார். 1971 போரில் அவர் காயமும் அடைந்தார். புனேவில் வசித்து வந்த தார் (88), முதுமை காரணமாக காலமானார்.
News February 22, 2025
EXP ரயில் தடம் புரண்டு விபத்து

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயில் ஒடிஷாவின் பாலசோர் மாவட்டத்தில் மின்கம்பத்தில் மோதியதால் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தண்டவாளம் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்த நிலையில், மின்கம்பத்தில் மோதி ரயில் தடம் புரண்டது. நல்வாய்ப்பாக இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், காயமடைந்தோர் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
News February 22, 2025
BREAKING: 4 நாட்கள் வக்கீல்கள் ஸ்டிரைக்

தமிழகம் முழுவதும் வரும் 26 முதல் மார்ச் 1ஆம் தேதி வரை நீதிமன்ற பணிகளை புறக்கணிக்கப் போவதாக வக்கீல்கள் அறிவித்துள்ளனர். தமிழக, புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டுக்குழு வெளியிட்ட அறிவிப்பில், வழக்கறிஞர் சட்டத் திருத்த வரைவு மசோதா-2025ஐ மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி ஸ்டிரைக்கில் ஈடுபடவும், 26ஆம் தேதி நீதிமன்றங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.