News April 9, 2025
நீட் விலக்கு பெறும் நம்பிக்கை வந்திருக்கிறது: முதல்வர்

மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் சிதைப்பதாக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் ஆளுநர் அரசியல் செய்ததாகத் தெரிவித்துள்ளார். ஆனால், ஆளுநரின் அதிகாரம் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
Similar News
News December 24, 2025
இந்துக்களின் உரிமையை CM பறிக்கிறார்: தமிழிசை

தினமும் CM ஸ்டாலின் பங்கேற்கும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில், இந்துக்களுக்கு எதிரான கருத்துகள் தெரிவிக்கப்படுவதாக தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார். சிறுபான்மையினரின் உரிமையை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் பெரும்பான்மை இந்துக்களின் உரிமையை CM ஸ்டாலின் பறிப்பதாக அவர் விமர்சித்துள்ளார். 13 அமைச்சர்கள் பெயிலில் இருப்பதாக குறிப்பிட்ட அவர், ஆன்மிகத்தை எதிர்த்தவர்களின் நிலை இதுதான் என்றும் சாடியுள்ளார்.
News December 24, 2025
பொங்கல் பண்டிகை… நாளை மகிழ்ச்சியான அறிவிப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், மக்கள் சிரமமின்றி ஊர்களுக்கு செல்ல, தென் மாவட்டங்களுக்கு மேலும் 40 ரயில் சேவைகள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை (அ) நாளை மறுநாள் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால், கடந்த முறை டிக்கெட் கிடைக்காதவர்கள் இந்த முறை உஷாரா புக் பண்ணிக்கோங்க நண்பர்களே!
News December 24, 2025
Profit-Sharing முறையில் ‘பாரத் டாக்ஸி’: அமித்ஷா

‘பாரத் டாக்ஸி’ சேவை விரைவில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். Profit-Sharing முறையில் அறிமுகப்படுத்தப்படும் இந்த சேவையில் கிடைக்கும் வருமானம் அனைத்தும் நேரடியாக டிரைவர்களுக்கு செல்லும் என்றும் அவர் கூறியுள்ளார். தனியார் நிறுவனங்களை காட்டிலும் இதில் கட்டணம் குறைவாக இருக்கும் எனவும், ஜனவரி 1-ல் முதற்கட்டமாக டெல்லியில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.


