News April 7, 2025
முதல் இந்தியர்… மணல் ஓவியக் கலைஞருக்கு கௌரவம்!

முக்கிய தலைவர்களின் பிறந்தநாளிலோ, விழாக் காலங்களிலோ ஒடிசா கடற்கரையில் தனது மணல் சிற்பம் மூலம் கவனத்தை ஈர்ப்பவர் சுதர்சன் பட்நாயக். இங்கிலாந்தில் நடைபெற்ற மணல் கலை விழாவில் பங்கேற்ற அவர், பிரெட் டாரிங்டன் மணல் மாஸ்டர் விருதை வென்றுள்ளார். இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் சுதர்சன் பட்நாயக்தான். ஒடிசாவைச் சேர்ந்த அவருக்கு, மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 1, 2025
உடனடியாக நிவாரணம் வழங்க CM ஸ்டாலின் உத்தரவு

டிட்வா புயலால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் இடங்களில் நடைபெறும் பணிகளை தொடந்து கண்காணித்து வருதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அக்டோபர் மாதம் பெய்த மழையால் 33% மேல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, நிவாரணம் வழங்க ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம் 4,235 ஹெக்டேர் வேளாண் பயிர்கள், 345 ஹெக்டேர் தோட்ட கலை பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 1, 2025
தேர்தலுக்கான விருப்ப மனு வாங்க தொடங்கிய அமமுக

2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் அமமுக சார்பில் போட்டியிடுவோர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். டிச.10 முதல் 18-ம் தேதி வரை விருப்ப மனு பெறலாம் எனவும் கூறியுள்ளார். TN-ல் மனுவுக்கான கட்டணம் ₹10,000 ஆகவும், புதுச்சேரிக்கு ₹5,000 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், மனுக்களை ஒப்படைக்க கடைசி நாள் ஜன.3-ம் தேதி எனவும் தினகரன் தெரிவித்துள்ளார்.
News December 1, 2025
சற்றுமுன்: விடுமுறை.. நாளை முதல் சிறப்பு அறிவிப்பு

கார்த்திகை தீபத்தையொட்டி டிச.3-ல் தி.மலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கானோர் கண்டு மகிழும் இந்த விழாவிற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நாளை, நாளை மறுநாளில் சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட நகரங்களில் இருந்து தி.மலைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. TNSTC செயலி, www.tnstc.in இணையதளம் மூலம் டிக்கெட் புக் பண்ணலாம்.


