News April 7, 2025
முதல் இந்தியர்… மணல் ஓவியக் கலைஞருக்கு கௌரவம்!

முக்கிய தலைவர்களின் பிறந்தநாளிலோ, விழாக் காலங்களிலோ ஒடிசா கடற்கரையில் தனது மணல் சிற்பம் மூலம் கவனத்தை ஈர்ப்பவர் சுதர்சன் பட்நாயக். இங்கிலாந்தில் நடைபெற்ற மணல் கலை விழாவில் பங்கேற்ற அவர், பிரெட் டாரிங்டன் மணல் மாஸ்டர் விருதை வென்றுள்ளார். இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் சுதர்சன் பட்நாயக்தான். ஒடிசாவைச் சேர்ந்த அவருக்கு, மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 12, 2025
7 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

கோவை, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று (ஏப்.12) ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ( MET) கணித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக சென்னையில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்யுதா?
News April 12, 2025
ஆட்டை பலி கொடுக்க போன இடத்தில் 4 பேர் பலி!

இதை சோகம் என்பதா? அதிசயம் என்பதா? ம.பி.யில் மத சடங்கிற்காக, ஆட்டை பலி கொடுக்க 6 பேர் காரில் வேகமாக சென்றுள்ளனர். சாவை நோக்கி வேகமாக போய்க்கொண்டிருந்த ஆட்டை விதி காப்பாற்றியது. கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்துள்ளது. இதில், காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைய, இருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், அந்த ஆடுக்கு ஒன்றும் ஆகவில்லை. விதி வலியது!
News April 12, 2025
தேமுதிக நிலைப்பாடு என்ன? பிரேமலதா அதிரடி பதில்

தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருப்பதால் கூட்டணி குறித்து தேமுதிக இன்னும் முடிவு எடுக்கவில்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். வரும் 30-ஆம் தேதி தருமபுரியில் நடக்கவுள்ள செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகவும் கூறினார். மேலும், 2026 தேர்தலை பொருத்தவரையில் தேமுதிக நிதானமாகத்தான் முடிவெடுக்கும் என அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார்.