News March 10, 2025

ஆணவக் கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை

image

தெலங்கானாவில் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த பிரனாய் பெருமுல்லா (24) என்ற தலித் இளைஞர், கடந்த 2018இல் வெட்டிக் கொல்லப்பட்டார். நாட்டையே உலுக்கிய இவ்வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அப்பெண்ணின் தந்தை மாருதி ராவ் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், பிரணாயை கொலை செய்த கூலிப்படை தலைவன் சுபாஷ் சர்மாவுக்கு மரண தண்டனை விதித்து நல்கொண்டா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

Similar News

News July 9, 2025

தமிழக அரசியலில் புதிய பெண் தலைவர்.. பாமகவில் திருப்பம்!

image

அன்புமணிக்கு போட்டியாக அவரது சகோதரி ஸ்ரீகாந்தி களமிறக்கப்பட்டுள்ளார். தைலாபுரத்தில் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் முதல் அரசியல் மேடை ஏறிய ஸ்ரீகாந்தியை ராமதாஸ் அறிமுகம் செய்து வைத்தார். இவரது மகன் முகுந்தனுக்கு பதவி வழங்கியதை எதிர்த்துதான் அன்புமணி சண்டையை தொடங்கினார். அதிமுகவில் ஜெயலலிதா, தேமுதிகவில் பிரேமலதா வரிசையில் பாமகவின் தலைமைக்கு ஸ்ரீகாந்தி வரவுள்ளதாக அக்கட்சியினர் பேசி வருகின்றனர்.

News July 9, 2025

இந்தியாவுக்கு கூடுதலாக 10% வரிவிதிப்பு: டிரம்ப்

image

இந்தியா உட்பட அனைத்து BRICS நாடுகளுக்கும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் வரியுடன் விரைவில் கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரிக்ஸ் கூட்டமைப்பினர் அமெரிக்க டாலரை வலுவிழக்க முயற்சிகள் மேற்கொள்வதாகவும், ஆகையால் அமெரிக்காவின் வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் இது அமலாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

News July 9, 2025

’சுரங்கப்பாதைக்கு அனுமதி தராததே விபத்துக்கு காரணம்’

image

கடலூர் அருகே செம்மங்குப்பம் ரயில்வே பாதையைக் கடக்கும்போது தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதியது. இதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைக்க தென்னக ரயில்வே ஒப்புதல் அளித்தும் மாவட்ட ஆட்சியர் ஓராண்டாக அனுமதி தராததே விபத்துக்கு காரணம் என இபிஎஸ் குற்றம் சுமத்தியுள்ளார். நடப்பாண்டில் கடலூரில் எத்தனை முறை CM ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம் நடத்தினார் எனவும் கேள்வி எழுப்பினார்.

error: Content is protected !!