News March 14, 2025
ஆணவக்கொலை: மகளை தீர்த்துக்கட்டிய கொடூர தந்தை

உ.பி. நொய்டாவைச் சேர்ந்த இளம்பெண் நேஹா, பெற்றோர் எதிர்ப்பை மீறி வேறு சமூக இளைஞரை மார்ச் 11ம் தேதி திருமணம் செய்துள்ளார். மறுநாளே நேஹாவை நைசாக பேசி அவரது தந்தை தங்களது வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு வந்த அவரை, தன் மகனுடன் சேர்ந்து தந்தை கொலை செய்துள்ளார். இருவரையும் கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. மகளின் உயிரைவிட கௌரவம் பெரியதா என்ன?
Similar News
News March 14, 2025
கடனில் தத்தளிக்க விட்ட திமுக அரசு : இபிஎஸ்

73 வருடங்களில் தமிழகத்தின் கடன் ₹5.18 லட்சம் கோடி மட்டுமே. ஆனால், திமுக ஆட்சியில் 3 வருடங்களில் ₹3.54 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். கடன் வாங்கித்தான் அரசு ஊழியர்களுக்கு திமுக அரசு சம்பளம் கொடுப்பதாக சாடிய அவர், அதிமுக அரசின் திட்டங்களை புதிய திட்டங்கள் போல் பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர் என்றும் குறை கூறியுள்ளார்.
News March 14, 2025
எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை

மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லாவுக்கு சென்னை ஐகோர்ட் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. 1997இல் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக ₹1.5 கோடி நிவாரண நிதி பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
News March 14, 2025
கேரள CM பினராயி விஜயனுக்கு நேரில் அழைப்பு

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் வரும் 22 ஆம் தேதி நடக்கும் கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் பங்கேற்க, கேரள CM பினராயி விஜயனுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. திருவனந்தபுரத்தில் அவரை நேரில் சந்தித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திமுக MP தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் அழைப்பு விடுத்தனர். இந்த விவகாரத்தில் தமிழகத்திற்கு வலுவான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக பினராயி விஜயன் உறுதியளித்தார்.