News June 17, 2024
தமிழகத்தில் அதிகரிக்கும் ஆணவக்கொலை: சிபிஎம்

கட்சியின் அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது என சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்னன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளதாக குற்றம் சாட்டிய அவர், காவல்துறையின் பார்வையாளராக தமிழக அரசு இருப்பதை ஏற்க முடியாது என்றார். கலப்பு திருமணம் செய்து வைத்த காரணத்தால் நெல்லை சிபிஎம் அலுவலகத்தை பெண் வீட்டார் சூறையாடியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 4, 2026
தங்கம் வாங்க சரியான நேரமா? வியாபாரிகள் சொல்வதென்ன?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கிட்டத்தட்ட பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. ஒரு வாரமாக 1 அவுன்ஸ்(28g) $4,700 என்ற சராசரியில் உள்ளது. மேலும் சில வாரங்களுக்கு இந்த நிலை நீடிக்கும் என தெரிவித்துள்ள வியாபாரிகள் இது தங்கம் வாங்குவதற்கான தருணம் என்றும் கூறுகின்றனர். சர்வதேச சந்தையில் தற்போது 1 அவுன்ஸ் $23 உயர்ந்து $4,676 ஆக உள்ளது. இதேநிலை நீடித்தால் நம்மூர் சந்தையில் சற்று விலை உயர வாய்ப்புள்ளது.
News April 4, 2026
விஜய் பிரசாரம்.. முக்கிய அப்டேட் வெளியானது

புதுச்சேரியில் இன்று தவெக வேட்பாளர்களை ஆதரித்து 3 இடங்களில் விஜய் பிரசாரம் செய்கிறார். இந்நிலையில், பிரசாரத்தில் பங்கேற்க 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இதில் கர்ப்பிணிகள், சிறுவர்கள், மாணவர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் வரவேண்டாம் என்றும், விஜய்யின் பிரசார வாகனத்தை யாரும் பின்தொடர வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News April 4, 2026
BREAKING: அதிமுகவில் இருந்து விலகுகிறாரா.. அறிவிப்பு

அதிமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்த தனபால், தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தியில் அக்கட்சியில் இருந்து விலகுவதாக சில நாள்களாக தகவல் பரவியது. இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்னை பொறுத்தவரை ஆதியும், அந்தமும் அதிமுகதான் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலில் சீட் கிடைக்காததால் எனக்கு வருத்தம் ஏதுமில்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>


