News September 29, 2025

மருக்களை ஒரே வாரத்தில் உதிர வைக்கும் வீட்டு வைத்தியம்

image

உடம்பு (அ) முகத்தில் இருக்கும் மருக்கள் உங்கள் அழகை குறைக்கிறதா? கவலையை விடுங்க. பூண்டை வைத்தே இந்த மருக்களை அகற்றலாம் என சொல்கின்றனர். இதற்கு, ஒரு பூண்டு பல் நசுக்கி, மருக்கள் மீது தடவி, அதனை பஞ்சை வைத்து மூடுங்கள். இதை தினமும் செய்து வந்தால், மருக்கள் கருப்பாகி 7 – 10 நாள்களுக்குள் உதிர்ந்து போகும் என்கின்றனர். இந்த வீட்டு வைத்தியத்தை அனைவரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

Similar News

News September 29, 2025

கரூரில் 41 பேர் உயிரிழந்தது எப்படி? Postmortem Report

image

கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தோரின் உடற்கூராய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், 25 பேர் 2 – 3 நிமிடங்கள் வரை மூச்சுத் திணறல் ஏற்பட்டு துடிதுடித்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும், 10-க்கும் மேற்பட்டோர் நெரிசலில் சிக்கியதில் மிதிபட்டு விலா எலும்புகள் முறிந்து பலியானது மருத்துவ அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. கூட்டமான இடங்களுக்கு செல்வோர் எப்போதும் ஜாக்கிரதையாகவே இருங்கள். SHARE IT.

News September 29, 2025

கரப்பான் பூச்சியை ஒழிக்க… ஈஸி டிப்ஸ்!

image

டாய்லெட் முதல் கிச்சன் வரை எல்லா பக்கமும் தொல்லை கொடுப்பது கரப்பான் பூச்சி. இதை ஒழிக்க இந்த யோசனையை ட்ரை பண்ணுங்க. *ஒரு முட்டை வெள்ளைக் கருவில் 2 ஸ்பூன் போரிக் ஆசிட் பவுடர், 2 ஸ்பூன் கோதுமை மாவு சேர்த்து கெட்டியாக பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். *இந்த உருண்டைகளை கரப்பான் வரும் இடங்கள், அட்டைப் பெட்டிகள், மூலைகளில் வைத்தால் அவற்றின் தொல்லை முழுமையாக நீங்கும். SHARE IT!

News September 29, 2025

லடாக்கில் அமைதி நிலவும் வரை பேச்சுவார்த்தை நடக்காது

image

லடாக்கில் அமைதி நிலவும் வரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என லே தலைமை கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும், மக்களிடையே நிலவும் பீதி, கோபம், துன்பங்களை களைய மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. அதேபோல், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை விடுவிக்க வேண்டும் என கார்கில் ஜனநாயக கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

error: Content is protected !!