News March 1, 2025
யூத இனப்படுகொலையில் தப்பிய பெண் மறைந்தார்

ஜெர்மன் சர்வாதிகாரியாக ஹிட்லர் இருந்தபோது, யூதர்கள் லட்சக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டனர். உலகில் நடைபெற்ற மிகப்பெரிய இனப்படுகொலையாக இது கூறப்படுகிறது. இதில் தப்பிய சுமார் 10,000 பேர் நியூயார்க்கில் தற்போதும் வசிக்கின்றனர். அவர்களில் மிகவும் வயதானவரான ரோஸ் கிரோன், நியூயார்க்கில் காலமானார். அவருக்கு வயது 113. ரோஸின் மறைவை குடும்பத்தினரும், யூத அமைப்பும் உறுதி செய்துள்ளன.
Similar News
News March 13, 2026
அதிமுகவுடன் விஜய் கூட்டணி.. பரபரப்பு தகவல்

திமுகவை வீழ்த்த கூட்டணிக்கு செல்லும் முடிவை தவெக எடுத்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. புஸ்ஸி ஆனந்த நடத்திய மா.செ., கூட்டத்தில், கூட்டணி செல்வதால் தங்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, விஜய் வெல்ல வேண்டும் என பலரும் கூறினார்களாம். அத்துடன், கூட்டணியில் 50-60 சீட்கள்+விஜய்க்கு DCM பதவி கிடைத்தால் நல்லது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் தனித்து போட்டியிடவும் அறிவுறுத்தினராம்.
News March 13, 2026
இவருடைய கட்சியில் தான் சசிகலா சேர்ந்துள்ளார்!

இன்று சசிகலா <<19370263>>அஇபுதமமுக<<>> என்ற கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். இக்கட்சியை எம்ஜிஆரின் தீவிர ரசிகரான பி.சக்கரவர்த்தி என்பவர் தொடங்கி இருந்தார். மதுரையை சேர்ந்த இவர், 2012-ல் ‘சக்கரவர்த்தி திருமகன்’ என்ற படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து, ஹீரோவாக நடித்துள்ளார். 2016-ல் இந்த கட்சியைத் தொடங்கி தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்து வைத்துள்ளார்.
News March 13, 2026
வங்கிக் கணக்கில் மேலும் ₹6,000.. CM ஸ்டாலின் அறிவிப்பு

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் (BLO) ஊதியத்தை மேலும் ₹6,000 உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, BLO-க்களின் ஆண்டு ஊதியம் ₹6,000-ல் இருந்து ₹12,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊக்கத் தொகையை ₹2,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. BLO ஊதியம் மற்றும் ஊக்கத் தொகை உயர்வுக்காக ₹99 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


