News November 29, 2024
சென்னை உட்பட 8 மாவட்டங்களில் விடுமுறை

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவள்ளூர், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களிலும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என்றும், புயல் தீவிரமாக இருக்கும் என்பதால் மாணவர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 27, 2025
Live செய்வதை தவிருங்கள்.. ஊடகங்களுக்கு அரசு அட்வைஸ்

நாட்டின் நலனுக்காக, அனைத்து ஊடகங்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக பயனர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான செய்தியை வெளியிடும்போது பொறுப்புடன் செயல்பட வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. மேலும், பாதுகாப்பு படைகளின் நடமாட்டத்தை நேரலை செய்வதை தவிர்க்குமாறும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
News April 27, 2025
அந்தரங்க உறுப்பை கடிக்கும் பெண்… அதிர்ச்சி

உ.பி.,யில் ஒரு கிராமத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட சண்டையால் கோபமடைந்த ஒரு பெண், விளையாடிக் கொண்டிருந்த அந்நபரின் 14 வயது மகனின் ஆணுறுப்பை கடித்துள்ளார். உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாலும், அவன் தடிமனான பேன்ட் அணிந்திருந்ததாலும் ஆணுறுப்பு காப்பாற்றப்பட்டுள்ளது. சண்டை போட்ட பலரின் அந்தரங்க உறுப்பை இப்பெண் கடித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
News April 27, 2025
CSK அணியில் என்ன பிரச்னை?

நடப்பு ஐபிஎல் தொடரின் மிக மோசமான அணியாக CSK இடம் பிடித்திருக்கிறது. இந்த தொடர் தோல்விக்கு பொறுப்பேற்பதாக பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியிருக்கிறார். ஏலத்தில் சரியான வீரர்களை எடுக்கவில்லை, வெற்றி பெறும் முனைப்பு இல்லை, தோனி ரிட்டையர் ஆக வேண்டும் என்று ரசிகர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். உண்மையில், CSK-வின் தோல்விக்கு எது காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?