News April 16, 2024
விடுமுறை பயணம்: விமான கட்டணம் கடும் உயர்வு

கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களிலிருந்து புறப்படும் விமானங்களில் பயண கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன. குறிப்பாக சென்னையிலிருந்து மும்பை செல்ல ₹4,700ஆக இருந்த கட்டணம் ₹7,000 ஆக உயா்த்தி வசூலிக்கப்படுகிறது. கொல்கத்தாவுக்கு ₹9,000ஆகவும், கொச்சிக்கு ₹8,000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல ஸ்ரீநகருக்கு ₹17,000 ஆகவும், போர்ட் பிளேயருக்கு ₹10,200 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
Similar News
News November 25, 2025
கனமழை வெளுக்கப் போகுது.. பறந்தது அலர்ட்

தமிழகத்தில் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் நவ.28 முதல் நவ.30 வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு TN அரசு அறிவுறுத்தியுள்ளது. நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டும், மீட்பு படையினரை உஷார்படுத்த வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் அதில் வழங்கப்பட்டுள்ளன.
News November 25, 2025
லெஜெண்ட்களின் லிஸ்ட்டில் சேர்ந்த ஜெய்ஸ்வால்!

கவுஹாத்தி டெஸ்ட்டில் <<18385744>>இந்திய அணி<<>> பரிதாபமான நிலையில் உள்ளது. இது சோகமானது தான் என்றாலும், ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது. இந்தியாவுக்காக டெஸ்ட்டில் அதிவேகமாக 2,500 ரன்களை விளாசிய லெஜெண்ட்களின் லிஸ்ட்டில் ஜெய்ஸ்வால் இணைந்துள்ளார். அதிவேகமாக 2,500 ரன்களை எட்டிய இந்திய வீரர்களின் டாப் 5 பட்டியலை கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து அவர்கள் யார் என பாருங்க.
News November 25, 2025
நடிகை பாலியல் வன்கொடுமை.. 8-ம் தேதி தீர்ப்பு

மலையாள நடிகர் திலீப்பிற்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் 8-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகையை காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. திலீப் உள்ளிட்ட 9 பேருக்கு எதிரான இந்த வன்கொடுமை வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்துவிட்டன. இந்நிலையில் எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கவுள்ளது.


