News April 16, 2024
விடுமுறை பயணம்: விமான கட்டணம் கடும் உயர்வு

கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களிலிருந்து புறப்படும் விமானங்களில் பயண கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன. குறிப்பாக சென்னையிலிருந்து மும்பை செல்ல ₹4,700ஆக இருந்த கட்டணம் ₹7,000 ஆக உயா்த்தி வசூலிக்கப்படுகிறது. கொல்கத்தாவுக்கு ₹9,000ஆகவும், கொச்சிக்கு ₹8,000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல ஸ்ரீநகருக்கு ₹17,000 ஆகவும், போர்ட் பிளேயருக்கு ₹10,200 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
Similar News
News October 17, 2025
ஈரத்தில் கைகளில் சுருக்கங்கள் ஏற்படுவது ஏன்?

சிறிது நேரம் தண்ணீரில் கையை வைத்திருந்தாலும், தோல்கள் சுருங்கி காட்சியளிக்கும். இதனை Pruney fingers என்பார்கள். வலிமையான தோல்கள் என்ற போதிலும், விரல்களின் தோலில் தண்ணீர் மிக எளிதாக நுழைவதால், இந்த சுருக்கங்கள் தோன்றுகின்றன. தோலில் ஏற்படும் இந்த சுருக்கங்கள் உங்களுக்கு ஒரு சில நன்மைகளையும் தருகிறது. ஆம், இந்த சுருக்கமான விரல்களால், ஈரமான பொருள்களின் மீதான பிடிமானம் அதிகரிக்கிறது.
News October 17, 2025
சற்றுமுன்: MLA சிவாஜிராவ் கார்டிலே காலமானார்

மகாராஷ்டிராவின் ரஹுரி தொகுதி MLA-வும், முன்னாள் அமைச்சருமான சிவாஜிராவ் கார்டிலே(67) மாரடைப்பால் காலமானார். பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், 2009, 2014 மற்றும் 2024 தேர்தல்களில் ரஹுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியவர். சிவாஜிராவ் கார்டிலே மறைவுக்கு மகாராஷ்டிரா CM பட்னாவிஸ், DCM அஜித் பவார், NCP MP சுப்ரியா சுலே உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். #RIP
News October 17, 2025
கருணைக்கொலையை அனுமதிக்கும் சட்டம் வந்தது

உருகுவேயில் தீராத மனநலம், உடல்நலம் பிரச்னைகள் உள்ளவர்களை கருணைக்கொலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, டாக்டர்கள் செய்யும் கருணைக்கொலை அனுமதிக்கப்படும். ஆனால், நோயாளியே மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்துகொள்ள கூடாது. மேலும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கருணைக்கொலையை தேர்ந்தெடுக்க விரும்பினால், டாக்டர்களின் அனுமதியை அதற்கு பெற வேண்டும். இதுபற்றி என்ன நினைக்கிறீங்க?