News April 8, 2025

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு இன்று (ஏப்.8) ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் கோபால் சுன்காரா உத்தரவிட்டுள்ளார். இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இன்று இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 26ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க..

Similar News

News December 12, 2025

ரஜினியின் 2-வது தாயார்.. இவரை பற்றி தெரியுமா?

image

ரஜினி தாயாகவே பாவிப்பவரின் பெயர் ரெஜினா. 1979-ல் ரஜினி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்களாலும் அவரை கட்டுப்படுத்த முடியாத சூழலில், ‘அம்மா.. அம்மா’ என முனங்கியபடி அவர் தவித்துள்ளார். அப்போது, ரெஜினாவின் தாயன்பே அவரை குணப்படுத்தியுள்ளது. சமூக சேவகியான ரெஜினாவை ஷூட்டிங்கின் ஒன்றின் போது பார்த்த கணமே, ரஜினி அவரை ‘அம்மா’ என அழைத்துள்ளார். அன்றிலிந்து ரஜினிக்கு ரெஜினா 2-வது தாயாக மாறினார்.

News December 12, 2025

நிதிஷிடம் புதிய பஞ்சாயத்தை கூட்டும் லாலு மகள்!

image

லாலு பிரசாத்தின் மகள் <<18303650>>ரோகிணி ஆச்சார்யா<<>> குடும்ப சண்டை காரணமாக அரசியலை விட்டு விலகினார். இந்நிலையில், X பதிவில் நிதிஷ்குமாரின் மகளிர் திட்டங்களை சூசகமாக பாராட்டிய அவர், ‘ஒவ்வொரு மகளும் எந்தவித பயமும் இல்லாமல் பெற்றோர் வீட்டிற்கு பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது, குடும்ப பூசலின் உச்சமா? JDU-வில் இணைவதற்கான அச்சாரமா? என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

News December 12, 2025

பொங்கல் பரிசு: ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்!

image

ரேஷன் கார்டுகளில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளை ஒரே நாளில் வழங்கும் வகையில் நாளை(டிச.13) சிறப்பு முகாம்கள் நடக்கிறது. சென்னை(மண்டல அலுவலகங்கள்), திருச்சி, கரூர், மதுரை, சிவகங்கை, நாமக்கல், நெல்லை மாவட்டங்களில் தாசில்தார் அலுவலகங்களில் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை இந்த முகாம்கள் நடைபெறவுள்ளன. பொங்கல் பரிசு கணக்கெடுப்பாக இந்த பணிகள் மற்ற மாவட்டங்களிலும் விரைவில் நடைபெறவுள்ளன.

error: Content is protected !!