News April 8, 2025

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு இன்று (ஏப்.8) ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் கோபால் சுன்காரா உத்தரவிட்டுள்ளார். இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இன்று இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 26ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க..

Similar News

News November 25, 2025

‘அம்மா Sorry.. என் சாவுக்கு இவர்தான் காரணம்’

image

சத்தீஸ்கரில் தனியார் பள்ளியில் மாணவி(15) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரின்சிபல் பாலியல் தொல்லை கொடுத்ததே, தனது சோக முடிவுக்கு காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு அவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், பிரின்சிபலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களே அவசரப்படாதீர், தற்கொலை எதற்கும் தீர்வல்ல!

News November 25, 2025

T20 WC: பிப்.15-ல் இந்தியா Vs பாகிஸ்தான்

image

இந்தியா, இலங்கை இணைந்து நடத்தும் 2026 டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் பிப்.7-ம் தேதி தொடங்குகிறது. குரூப் ஏ-ல் இடம்பெற்றுள்ள IND பிப்.7-ல் USA, பிப்.12-ல் நமீபியா, பிப்.15-ல் பாகிஸ்தான், பிப்.18-ல் நெதர்லாந்துடன் மோதுகிறது. பைனல் மார்ச்.8-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. PAK பைனலுக்கு முன்னேறினால் போட்டி கொழும்புவில் நடத்தப்படும்.

News November 25, 2025

முடி உதிர்வுக்கு Full Stop; இந்த ஒரு எண்ணெய் போதும்!

image

முடி கொட்டும் பிரச்னை நீங்கி, நிற்காமல் வளர பூசணி விதை எண்ணெய் பெரிதும் உதவும் என டாக்டர்கள் சொல்கின்றனர். இந்த விதையில் உள்ள வைட்டமின்கள் முடி உதிர்வை கட்டுப்படுத்துவதோடு, பொடுகு தொல்லை, Dry Scalp போன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வளிக்கும். இந்த எண்ணெயை தடவி 1 மணி நேரம் ஊறவைத்த பின்பு தலைக்கு குளியுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்தால் முடி சம்பந்தமான அனைத்து பிரச்னைகளும் நீங்கும். SHARE.

error: Content is protected !!