News April 8, 2025
ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு இன்று (ஏப்.8) ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் கோபால் சுன்காரா உத்தரவிட்டுள்ளார். இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இன்று இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 26ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க..
Similar News
News April 8, 2025
3 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 3 நாள்களுக்கு மாநிலம் முழுவதும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (MET) தெரிவித்துள்ளது. மேலும், தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்ததாகவும், இது புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் கணித்துள்ளது. அதேநேரம் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News April 8, 2025
உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்த 10 மசோதாக்கள் என்ன?

கவர்னருக்கு பதில் முதல்வரை பல்கலை., வேந்தராக்குவதற்கான மசோதா, கால்நடை பல்கலை திருத்த மசோதா, மீன்வள பல்கலை திருத்த மசோதா, அம்பேத்கர் சட்டப் பல்கலை, TN MGR மருத்துவ பல்கலைக்கு முதல்வரை வேந்தராக்கும் மசோதா, வேளாண் பல்கலை, தமிழ் பல்கலை சட்டத் திருத்த மசோதா, TN பல்கலைகள் 2ம் திருத்த மசோதா, கால்நடை 2ம் திருத்த மசோதா, மீன்வள பல்கலை 2வது திருத்த மசோதா ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
News April 8, 2025
கவர்னர் பதவி விலகக் கோரி வலுக்கும் குரல்கள்!

வரலாற்றில் முதல்முறையாக மசோதாக்கள் மீது முடிவெடுக்க TN கவர்னருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்து அளித்த தீர்ப்பு, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என CM ஸ்டாலின் வரவேற்றுள்ளார். மேலும், கவர்னர் நிறுத்தி வைத்த 10 மசோதக்களுக்கும் உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், அவர் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.