News April 8, 2025

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு இன்று (ஏப்.8) ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் கோபால் சுன்காரா உத்தரவிட்டுள்ளார். இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இன்று இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 26ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க..

Similar News

News August 13, 2025

Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

image

கேள்விகள்:
1. இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு அமலாக்கப்பட்டது?
2. திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது?
3. EXAM முறையை கண்டுபிடித்தவர் யார்?
4. உடலில் ரத்தம் பாயாத பகுதி எது?
5. தாவரங்கள் காற்றிலிருந்து எந்த வாயுவை உறிஞ்சுகின்றன?
பதில்கள் மதியம் 12:30 மணிக்கு Way2news App-ல் வெளியிடப்படும்.

News August 13, 2025

இனிமேல் ₹24க்கே ஆன்லைனில் ITR தாக்கல் பண்ணலாம்

image

ஜியோ பைனான்ஸ் செயலியில் புதிய வரி திட்டமிடல் (tax planning) மற்றும் ITR தாக்கல், தற்போது புதிய அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பயனர்களுக்கு சரியான வரி முறையை ( பழைய – புதிய வரி) தேர்வு செய்யவும், குழப்பங்களை குறைக்கவும், மலிவு விலையில் தாங்களாகவோ அல்லது நிபுணர் உதவியுடனோ வருமான வரிக் கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்யவும் உதவுகிறது. இந்த திட்டம் வெறும் ₹24 முதல் ஆரம்பமாகிறது.

News August 13, 2025

திமுகவில் இணைந்தது ஏன்? மைத்ரேயன் விளக்கம்

image

அமைப்பு செயலாளராக இருந்த தன்னை அதிமுக சரியாக பயன்படுத்தவில்லை என திமுகவில் இணைந்த மைத்ரேயன் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக – பாஜக கூட்டணியில் பெரும் குழப்பம் உள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். EPS பிரச்சாரத்துக்கு வரும் கூட்டம் அழைத்து வரப்படும் கூட்டம் மட்டுமே என்றும் அவர் மக்கள் தலைவர் இல்லை எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!