News April 1, 2025
3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

பங்குனி உத்திரத்தையொட்டி ஏப்ரல் 11ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஏப்ரல் 7ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 7ஆம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது.
Similar News
News October 19, 2025
ரஜினி வழியில் விஜய்?

நான் தான் ஹீரோ என நானே கூறிக்கொண்டே இருக்கக்கூடாது, என்னை பற்றி பிறர் பேசினாலே நான் ஹீரோ என ரஜினி கூறியிருப்பார். விஜய் வீட்டுக்குள்ளேயே உள்ள நிலையில், அவரை பற்றி அரசியல் தலைவர்கள், கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வரை அனைவரும் பேசுகின்றனர். சினிமாவில் ஹீரோவாக ஜொலிப்பதை போலவே, அரசியலிலும் அவ்வப்போது வெளியே வந்தால் போதும் ஜெயித்துவிடலாம் என்பது முடியாத ஒன்று என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News October 19, 2025
தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறையா இவர்கள்?

MGR, சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என வெகுசிலரே ரசிகர்கள் மனதை கவர்ந்ததோடு, வணிக ரீதியாகவும் வெற்றி நாயகர்களாக கருதப்படுகிறார்கள். இந்த வரிசையில், தமிழ் சினிமாவில் தற்போது மணிகண்டன், கவின், ப்ரதீப் ரங்கநாதன், ஹரீஷ் கல்யாண், அசோக் செல்வன், துருவ் விக்ரம் ஆகியோர் களமிறங்கியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் யார் தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறையாக மாறுவார்கள்?
News October 19, 2025
தித்திக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துகள்

அன்புக்குரியவர்கள், நண்பர்களுக்கு தீபாவளி திருநாள் வாழ்த்துகளை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள். *மத்தாப்புகள் சிதற, பட்டாசுகள் வெடிக்க வீடெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க கொண்டாடுவோம் இந்த பண்டிகையை.. தீபாவளி நல்வாழ்த்துகள். * அறியாமை இருள் நீங்கி அறிவுச் சுடரொளி எங்கும் பரவட்டும். *தீமைகள் ஒழிந்து நன்மை ததும்பட்டும்… இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.