News April 1, 2025

3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

image

பங்குனி உத்திரத்தையொட்டி ஏப்ரல் 11ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஏப்ரல் 7ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 7ஆம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது.

Similar News

News December 1, 2025

செங்கல்பட்டு: சிறுமியை கத்தியால் குத்திய சிறுவன்!

image

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே ஓணம்பாக்கத்தில் குடும்ப முன்விரோதம் காரணமாக, தேவதர்ஷினி (17) என்ற மாணவியை அவரது உறவினரான 16 வயது சிறுவன் கத்தியால் குதித்தனர். இதில் படுகாயமடைந்த மாணவி மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 11-ம் வகுப்பு படிக்கும் அந்தச் சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 1, 2025

போட்டோவை காணிக்கையாக கேட்கும் அம்மன்!

image

பொங்கல் வைப்பது, முடி, பண காணிக்கை போன்றவற்றை காணிக்கையாக செலுத்தும் பல கோயில்கள் உள்ளன. ஆனால், வேலூர் ஆற்காடு அருகே உள்ள கலவை என்னும் கிராமத்தில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி கோயில் முற்றிலும் மாறுபட்டதாகும். எந்த வேண்டுதல் ஆயினும் அது நிறைவேறிய பிறகு, தங்களது போட்டோவை காணிக்கையாக கோயிலில் மாட்டிவிட்டு செல்கின்றனர். அதே போல, இக்கோயிலில் பூசாரியும் இல்லை. அர்ச்சனை, அபிஷேகமும் நடப்பதில்லை.

News December 1, 2025

Cinema 360°: மீண்டும் லவ் அவதாரில் ரியோ

image

*ரஷ்மிகா மந்தனாவின் ‘The GirlFriend’ டிச.5-ம் தேதி நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. *ரியோ ராஜ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் காலை 11:11 மணிக்கு ரிலீசாகிறது. *பிரபுதேவாவின் ‘மூன்வாக்’ கோடை விருந்தாக வெளியாகும் என அறிவிப்பு. *சல்மான் கானின் அடுத்த படத்தை ‘வாரிசு’ இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கவுள்ளதாக தகவல். *கவினின் ‘மாஸ்க்’ ₹10 கோடி வசூலித்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!