News April 1, 2025

3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

image

பங்குனி உத்திரத்தையொட்டி ஏப்ரல் 11ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஏப்ரல் 7ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 7ஆம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது.

Similar News

News November 20, 2025

GV பிரகாஷின் கரியரில் இதுதான் பெஸ்ட் பாடலா?

image

‘பராசக்தி’ படத்தின் 1st சிங்கிள் ஏற்கெனவே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விரைவில் 2-வது சிங்கிள் வெளியாக உள்ளதாக இசையமைப்பாளர் GV பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார். சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் ஆகிய இருவருடனும் GVP, 2-வது முறையாக ஜோடி சேர்ந்துள்ளார். இந்நிலையில், 2nd சிங்கிள் தன்னுடைய கரியரின் சிறந்த பாடல்களில் ஒன்றாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

News November 20, 2025

சட்டம் போட்டு சிக்கலில் மாட்டிக்கொண்டாரா டிரம்ப்!

image

பாலியல் குற்றவாளி <<18327094>>எப்ஸ்டீன்<<>> தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வெளியிடும் சட்டத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். இந்த விவகாரத்தில் டிரம்ப், மஸ்க், கிளிண்டன் உள்பட பலரும் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், சட்டம் போட்டு டிரம்ப் சிக்கலில் மாட்டிக்கொண்டாரா என கேள்வி எழுந்துள்ளது. அதேநேரம் சட்டத்தின் Loop holes-ஐ கொண்டு முழு ஆவணங்களையும் வெளியிடாமல் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

News November 20, 2025

ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்: CM ஸ்டாலின்

image

கோவைக்கு PM மோடி வந்து சென்ற ஈரம் காய்வதற்குள், நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்து, மத்திய பாஜக அரசு அடுத்த துரோகத்தை செய்துள்ளதாக CM ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்த தனது X பதிவில், கனமழையால் ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் அழுகுரல் ஏன் PM-க்கு கேட்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!