News April 1, 2025

3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

image

பங்குனி உத்திரத்தையொட்டி ஏப்ரல் 11ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஏப்ரல் 7ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 7ஆம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது.

Similar News

News December 16, 2025

விஜய் உடன் இணையும் அடுத்த அதிமுக தலைவர் இவரா?

image

JCD பிரபாகரனை தவெகவில் இணைக்க செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், விஜய் தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என கூறியிருந்தார். தவெகவில் இணைகிறீர்களா என்ற கேள்விக்கும் அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை. அதிமுகவின் முக்கிய முகமான EX MLA JCD பிரபாகர் தற்போது OPS அணியில் உள்ளார்.

News December 16, 2025

இந்தியா-ஜோர்டன் இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள்

image

அரசு முறை பயணமாக PM மோடி, ஜோர்டன் சென்றிருந்த நிலையில், இருநாடுகள் இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. நீர் மேலாண்மை, டிஜிட்டல் வளர்ச்சி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் ஒத்துழைப்பு, 2025-2029 வரை இருநாடுகள் இடையே கலாசார பரிமாற்ற நிகழ்வு, UNESCO அங்கீகாரம் உடைய எல்லோரா, பெட்ரா இடையே இரட்டை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளன. இது IND-JOR உறவை மேலும் வலுவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 16, 2025

புதிய தலைமை தகவல் ஆணையர் நியமனம்

image

புதிய தலைமை தகவல் ஆணையராக (Chief Information Commissioner) ராஜ்குமார் கோயல் பதவியேற்றுள்ளார். இவர் PM மோடி, அமித்ஷா, ராகுல் காந்தி ஆகியோரின் ஆலோசனைக்கு பின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், 1990-ம் ஆண்டு பேட்ச் அருணாச்சல பிரதேசம்- கோவா- மிசோரம்- யூனியன் பிரதேசங்​கள் பிரிவை சேர்ந்த ஓய்வுபெற்ற IAS அதிகாரி ஆவார். சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் செயலாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

error: Content is protected !!