News April 1, 2025

3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

image

பங்குனி உத்திரத்தையொட்டி ஏப்ரல் 11ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஏப்ரல் 7ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 7ஆம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது.

Similar News

News April 3, 2025

வக்ஃப் சொத்து என்பது என்ன?

image

வக்ஃப் சட்டம் 1995-ன் படி, எந்தவொரு முஸ்லிமும் தனது அசையும் மற்றும் அசையா சொத்துகளை கடவுளின் (அல்லாஹ்) பெயரில் பக்தி, தர்மம் அல்லது மத நோக்கத்திற்காக நிரந்தரமாக அர்ப்பணித்தால், அத்தகைய அர்ப்பணிப்பு வக்ஃப் என்றும், அத்தகைய சொத்து வக்ஃப் சொத்தும் எனவும் அழைக்கப்படுகிறது. இஸ்லாமியர்கள் வழங்கும் இந்த சொத்துகளை அச்சமூகத்தினரே நிர்வகிக்கின்றனர். இதற்காக மத்திய, மாநில வக்ஃப் வாரியங்கள் உள்ளன.

News April 3, 2025

ராசி பலன்கள் (03.04.2025)

image

➤மேஷம் – உறுதி ➤ரிஷபம் – பெருமை ➤மிதுனம் – சுகம் ➤கடகம் – உயர்வு ➤சிம்மம் – தெளிவு ➤கன்னி – சுபம் ➤துலாம் – இரக்கம் ➤விருச்சிகம் – அலைச்சல் ➤தனுசு – பயம் ➤மகரம் – அமைதி ➤கும்பம் – குழப்பம் ➤மீனம் – சாதனை.

News April 3, 2025

வக்ஃப் (திருத்த) சட்ட மசோதா என்பது என்ன?

image

நாடு முழுவதும் உள்ள வக்ஃப் வாரியங்களின் செயல்பாட்டை திருத்தியமைத்து, அவற்றின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பேற்பை உறுதிப்படுத்த புதிய சட்ட மசோதா வழி செய்கிறது. இதற்காக1995-ல் கொண்டுவரப்பட்ட வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பெண்களுக்கு கூடுதல் உரிமைகள் வழங்கவும் இதில் வழி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!