News August 3, 2024

நாட்டு மக்களுக்கு அமித் ஷா அழைப்பு

image

மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில், தேசியக் கொடியை ஏற்றுமாறு, அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் 78ஆவது சுதந்திர தினம், வரும் 15ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மூவர்ணக் கொடியை, ஆகஸ்ட் 9-15 வரை அனைவரது வீடுகளிலும் ஏற்றுமாறு அழைப்பு விடுத்துள்ள அவர், தேசியக் கொடி முன்பு செல்ஃபி எடுத்து அதனை <>இந்த <<>>இணையதளத்தில் பதிவேற்றுமாறு வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News October 23, 2025

உடனே அனைத்து பள்ளிகளிலும்

image

கனமழை காரணமாக ராமநாதபுரத்தில் தொடக்க பள்ளியின் கட்டடம் விரிசல்களுடன் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக எதிர்க்கட்சியினர் ஒரு வீடியோ வெளியிட்டனர். இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இருக்கக்கூடாது. விரிசல்களுடன் இருக்கும் பள்ளி கட்டடங்களை போர்க்கால அடிப்படையில் சரி செய்யவும், நோய் தொற்று பரவாமல் இருக்க, பள்ளிகளில் தேங்கி இருக்கும் மழை நீரை அகற்றவும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

News October 23, 2025

வங்கிக் கணக்கு இருக்கிறதா… முக்கிய அறிவிப்பு

image

வங்கி வாடிக்கையாளர்களுக்கு நாமினிகளை (வாரிசுதாரர்கள்) நியமிப்பது தொடர்பான புதிய விதிமுறைகள் வரும் நவ.1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, *ஒருவர் தனக்கு நான்கு நாமினிகள் வரை நியமிக்கலாம். *அந்த 4 பேரில் யார் முதன்மை நாமினி, யாருக்கு எவ்வளவு சதவீதம் பங்கு என்பதையும் நிர்ணயிக்கலாம் *டெபாசிட்ஸ், லாக்கர், லாக்கரில் வைக்கும் பொருள்கள் ஆகியவற்றுக்கும் இது பொருந்தும்.

News October 23, 2025

லோடு மேன் பேச்சை கேட்டு EPS கூறுகிறார்: உதயநிதி

image

EPS கூறியது போல் செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை என DCM உதயநிதி தெரிவித்துள்ளார். தஞ்சையில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நெல் கொள்முதல் தொடர்பாக <<18072011>>EPS<<>> பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும், லோடு மேன் ஒருவர் கூறிய தகவலை வைத்து நாளொன்றுக்கு 800 மூட்டைகள் நெல் கொள்முதல் என கூறுவதாகவும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!