News January 10, 2025
HMPV வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு சிறப்பு வார்டு தயார்

தருமபுரி அரசு மருத்துவமனையில் இதுவரை HMPV வைரஸ் தொற்று பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை. மேலும் HMPV வைரஸ்தொற்று அறிகுறி கண்டறியப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க 20 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் மக்கள் மாஸ்க் அணியவும் மருத்துவமனை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News January 31, 2026
ALERT: தருமபுரி மின் தடை தேதிகள் வெளியீடு!

தருமபுரி மாவட்டத்தில் அடுத்த மாதம் பிப்ரவரி மாதத்திற்கான உத்தேச மின் நிறுத்த பட்டியல் வெளியிடபட்டுள்ளது. இதில் அதியமான்கோட்டை: 5-ம் தேதி, வெள்ளிச்சந்தை: 5-ம் தேதி, அருர் 7-ம் தேதி, இலக்கியம்பட்டி 7-ம் தேதி, சோகத்தூர் 7-ம் தேதி மற்றும் பொம்மிடி பாப்பிரெட்டிப்பட்டி, தருமபுரி, காரிமங்கலம் என அனைத்து ஊராட்சிகளுக்கும் மின்தடை தேதி வெளியாகி உள்ளது.
News January 31, 2026
தருமபுரி: வாடகை வீட்டுக்கு போறீங்களா? இது முக்கியம்!

தருமபுரியில், வாடகைக்கு குடியேற்பவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!
News January 31, 2026
தருமபுரி: தூக்கி வீசப்பட்டு பலி!

டி.ஆண்டியூரை சோ்ந்தவர் பெருமாள். இவா் நேற்று (ஜன.30) தீா்த்தமலைக்கு நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது திருவண்ணாமலை நோக்கிச் சென்ற லாரி பெருமாள் மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்தில் உயிரிழந்தாா். இதையடுத்து, கோட்டப்பட்டி போலீசார் பெருமாளின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.


