News April 6, 2025

பாம்பன் பாலத்தின் வரலாறு!

image

இந்தியா, இலங்கையை இணைக்க 1876ல் உதித்த யோசனைதான் பாம்பன் பாலம் உருவாகக் காரணம். 1914ல் பாம்பன் பாலம் கட்டி முடிக்கப்பட, மதுரை– தனுஷ்கோடி வரை ரயில் போக்குவரத்து தொடங்கியது. கடந்த 2014ல் நூற்றாண்டைக் கொண்டாடிய பாம்பன் பாலம் இயற்கை சீற்றங்கள், விபத்துகளால் பலவீனமடைந்ததால், அதன் அருகே தற்போது புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. பழசும் சரி, புதுசும் சரி, இரண்டுமே பொறியியல் அற்புதம் தான்!

Similar News

News November 27, 2025

கார் vs கர்சீப்: ஸ்டாலின் – EPS கடும் மோதல்

image

நெல் ஈரப்பத தளர்வு கோரிக்கைக்காக PM-ஐ சந்திக்கிறேன் என EPS கூறினால், அரசு சார்பில் தானே வியர்க்காத அளவு நல்ல கார் ஏற்பாடு செய்து தருகிறேன் என CM ஸ்டாலின் சாடியிருந்தார். இந்நிலையில், ரெட் ஜெயண்ட் வாசலுக்கு ரெய்டு வந்ததும் வியர்க்க விறுவிறுக்க, வியர்வையை துடைக்க கர்சீப்பை கூட மறந்துவிட்டு டெல்லிக்கு பதறிப் பறந்ததையெல்லாம் மறந்துவிட்டீர்களா என EPS விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

News November 27, 2025

Sports 360°: இன்று WPL வீராங்கனைகள் ஏலம்

image

*சுல்தான் அஸ்லான்ஷா ஹாக்கி தொடரில், இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வென்றது. * WPL வீராங்கனைகள் ஏலம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. *சையத் முஷ்டாக் அலி தொடரில், தமிழகத்தை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வென்றது. *Under-17 ஆசிய கோப்பை குவாலிஃபையர்ஸில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் சீன தைபேவை வீழ்த்தியது. *டி-20 ஆல்ரவுண்டர் தரவரிசையில் சிக்கந்தர் ராஸா முதலிடம் பிடித்துள்ளார்.

News November 27, 2025

கேரள வாக்குச்சீட்டுகளில் தமிழ்

image

டிச.9, 11 ஆகிய தேதிகளில் கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் மொழி சிறுபான்மையினர் வசிக்கும் வார்டுகளில், வாக்குச்சீட்டுகளிலும் வாக்களிப்பதற்கான அடையாள சீட்டுகளிலும், வேட்பாளர்களின் பெயர்கள் தமிழ், கன்னடத்தில் இருக்கும் என ECI அறிவித்துள்ளது. குறிப்பாக, திருவனந்தபுரம், பாலக்காடு, வயநாடு, இடுக்கி மாவட்டங்களில் தமிழ் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!