News April 6, 2025
பாம்பன் பாலத்தின் வரலாறு!

இந்தியா, இலங்கையை இணைக்க 1876ல் உதித்த யோசனைதான் பாம்பன் பாலம் உருவாகக் காரணம். 1914ல் பாம்பன் பாலம் கட்டி முடிக்கப்பட, மதுரை– தனுஷ்கோடி வரை ரயில் போக்குவரத்து தொடங்கியது. கடந்த 2014ல் நூற்றாண்டைக் கொண்டாடிய பாம்பன் பாலம் இயற்கை சீற்றங்கள், விபத்துகளால் பலவீனமடைந்ததால், அதன் அருகே தற்போது புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. பழசும் சரி, புதுசும் சரி, இரண்டுமே பொறியியல் அற்புதம் தான்!
Similar News
News April 7, 2025
19 வயது நபரின் நுரையீரலில் 7 ஆணிகள்!

மகாராஷ்டிராவில் இளைஞரின் நுரையீரலில் சிக்கியிருந்த 7 ஆணிகளை 3 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு டாக்டர்கள் அகற்றியுள்ளனர். தூங்கும்போது தவறுதலாக ஆணிகளை விழுங்கியதாக கூறி அந்த 19 வயது இளைஞர் மும்பையில் உள்ள பிம்பிரி ஹாஸ்பிடலில் அட்மிட்டாகியுள்ளார். இதனைக் கேட்டு முதலில் ஷாக்கான டாக்டர்கள் பின்னர் தங்களது டூட்டியை செய்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர். தூங்கும் போது கூட ஜாக்கிரதையா இருங்க மக்களே!
News April 7, 2025
இப்படி ஒரு Resignation லெட்டரை நீங்க பாத்திருக்க மாட்டீங்க!

வேலையை விடும் போது, அனுப்பும் மெயிலில் பெரிய கதையே எழுதுவார்கள். ‘சீனியர்கள் உதவினார்கள், இந்த ஆபீஸ் தான் பெஸ்ட்’ என பல கதைகள் இருக்கும். ஆனால், யாரும் இப்படி ஒரு Resignation letter’ஐ பார்த்திருக்கவே முடியாது. வெறும் 7 வார்த்தைகள் தான். ‘இந்த Charity வேலை எனக்கானது இல்லை.. நான் வெளியேறுகிறேன்’ என நேராக பொட்டில் அடித்தார் போல, கூறிவிட்டு ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். ஆனா, இதுவே போதும்ல!
News April 7, 2025
இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத சரிவு

இந்திய பங்குச்சந்தைகள் இன்று வரலாறு காணாத சரிவைக் கண்டுள்ளன. காலையில் வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் சரிந்து 72,757 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதேபோல், நிஃப்டியும் 900 புள்ளிகள் சரிந்துள்ளதால் 21,887 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. இதனால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.