News April 6, 2025

பாம்பன் பாலத்தின் வரலாறு!

image

இந்தியா, இலங்கையை இணைக்க 1876ல் உதித்த யோசனைதான் பாம்பன் பாலம் உருவாகக் காரணம். 1914ல் பாம்பன் பாலம் கட்டி முடிக்கப்பட, மதுரை– தனுஷ்கோடி வரை ரயில் போக்குவரத்து தொடங்கியது. கடந்த 2014ல் நூற்றாண்டைக் கொண்டாடிய பாம்பன் பாலம் இயற்கை சீற்றங்கள், விபத்துகளால் பலவீனமடைந்ததால், அதன் அருகே தற்போது புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. பழசும் சரி, புதுசும் சரி, இரண்டுமே பொறியியல் அற்புதம் தான்!

Similar News

News November 23, 2025

மெட்ரோ திட்டத்தை வைத்து அரசியல்: அண்ணாமலை

image

கோவை – மெட்ரோ ரயில் திட்டங்களை வைத்து CM ஸ்டாலின் அரசியல் செய்வதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கு 2 முறை வந்த PM மோடியை, CM ஸ்டாலின் இங்கேயே சந்தித்திருக்கலாமே? ஏன் சந்திக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் எந்த ஒரு மாநில மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் வழங்காத நிதியை சென்னை மெட்ரோ-2 திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

News November 23, 2025

ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் நின்றது

image

இன்று நடைபெறவிருந்த ஸ்மிருதி மந்தனா, இசையமைப்பாளர் பலாஷ் முச்சலின் திருமணம் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதியின் தந்தை சீனிவாஸ் மந்தனாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, மகாராஷ்டிராவின் சாங்லியில் உள்ள ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

News November 23, 2025

-40°C குளிரில் இந்திய நகரம் PHOTOS

image

டிராஸ், கார்கில் மாவட்டத்தில் உயரமான மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள நகரம். இது, பூமியில் மக்கள் வாழும் மிகவும் குளிரான பகுதிகளில் ஒன்று. இங்கு, குளிர்காலத்தில் வெப்பநிலை, இயல்பாகவே -20°C முதல் -30°C வரை செல்லும். இந்நிலையில், 3 நாள்களுக்கு முன், – 40°C-க்கு குறைந்தது. இதன்மூலம், டிராஸ் உலகின் 2-வது குளிர்பகுதியாக மாறியுள்ளது. மேலே உள்ள இதன் அழகிய போட்டோஸை, ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.

error: Content is protected !!