News June 5, 2024
வரலாற்று சிறப்பு வாய்ந்த தேர்தல்: சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்த மக்கள் விரோத, மோசமான ஆட்சியை மக்கள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். விஜயவாடாவில் பேசிய அவர், தேர்தலில் TDP கட்சியை வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி. மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார். என் வாழ்நாளில் இதுபோன்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த தேர்தலைக் கண்டதில்லை எனத் தெரிவித்தார்.
Similar News
News December 3, 2025
பண மழை கொட்ட போகும் 3 ராசிகள்

வரும் டிச.6-ம் தேதி, புதன் பகவான் விருச்சிக ராசியில் பெயர்ச்சியாவார். இதனால் பின்வரும் 3 ராசியினர் அதிக நன்மைகள் பெறுவர்: *விருச்சிகம்- பணியில் பதவி, சம்பள உயர்வு, தொழிலில் லாபம் கிடைக்கும். *திருமண வாழ்க்கை சிறக்கும். *மகரம்- வருமானம் கணிசமாக அதிகரிக்கும், தொழிலில் லாபம் கூடும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உண்டு. *கும்பம்- வேலை, வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும்.
News December 3, 2025
இலவச லேப்டாப் திட்டத்தில் குளறுபடி: நயினார்

தமிழகத்தில் பல லட்சம் மாணவர்கள் உள்ள நிலையில், வெறும் ₹10 லட்சம் பேருக்கு மட்டும் லேப்டாப் வழங்குவது ஏன் என்று நயினார் நாகேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். எதன் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என கேட்ட அவர், பகுத்தறிவு பேசிக்கொண்டு திரைமறைவில் எதற்கு இத்தனை பாகுபாடுகள் எனவும் சாடியுள்ளார். தேர்தலுக்காக அதிமுகவின் திட்டத்தை அரசு கையில் எடுத்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
News December 3, 2025
பள்ளிகளுக்கு விடுமுறை.. 2-வது மாவட்டமாக அறிவிப்பு

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளதால், வட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச.4) விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். ஏற்கெனவே, நாளை <<18461242>>சென்னையில்<<>> பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.


