News April 25, 2025
இந்துக்கள் அதை செய்யவே மாட்டார்கள்: மோகன் பகவத்

தற்போது நடப்பது தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையிலான சண்டை என பஹல்காம் தாக்குதல் குறித்து RSS தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்துள்ளார். இப்போது நடக்கும் சண்டை மதங்களுக்கு இடையிலானது அல்ல எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், நம் மக்கள் யாரும் எதிராளியின் மதத்தை கேட்டு கொன்றதில்லை எனவும், இந்துக்கள் ஒருபோதும் அதை செய்ய மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 26, 2025
வாட்சப் புது அப்டேட்.. இனிமேல் அதை பண்ண முடியாது!

வாட்சப்பில் பயனர்களின் தரவுகளை பாதுகாக்க புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் கொண்டுவந்துள்ளது. ADVANCED CHAT PRIVACY அம்சம் மூலம் நாம் அனுப்பும் குறுஞ்செய்தி, புகைப்படங்களை பார்க்க மட்டுமே முடியும். பகிர முடியாது. தனிநபர், குழு உரையாடல் இரண்டிலும் இந்த அம்சம் வேலை செய்யும். பீட்டா வெர்ஷனில் அறிமுகமாகியுள்ள இது, விரைவில் அனைவருக்கும் கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அருமை..!
News April 26, 2025
5 திமுக அமைச்சர்களுக்கு நெருக்கடி

SC-ன் கெடுபிடியால் செந்தில்பாலாஜியின் அமைச்சர் பதவிக்கு சிக்கல் எழுந்துள்ளது. சர்ச்சை கருத்து பேசிய பொன்முடிக்கு எதிரான வழக்கில் TN அரசு விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. துரைமுருகன், MRK பன்னீர்செல்வத்துக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வருகின்றன. KN நேரு சகோதரருக்கு எதிரான வழக்கில் ED-க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், 5 அமைச்சர்களும் சிக்கலில் உள்ளனர்.
News April 26, 2025
மஞ்சள் படையின் பிளே ஆஃப் கனவு கலைந்தது?

7 தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசியாக இருக்கும் CSK-க்கு, பிளே ஆஃப் வாய்ப்பு மங்கியுள்ளது. இந்த சீசனில் தொடக்கம் முதலே அந்த அணி சொதப்பி வருகிறது. எஞ்சி இருக்கும் 5 போட்டிகளில் வென்றாலும் கூட அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது கடினம்தான். இதற்கு முன்பு 2020, 2022, 2024 ஆகிய ஆண்டுகளில் லீக் சுற்றுடன் CSK நடையை கட்டி இருக்கிறது. இந்தாண்டும் அதேநிலை தொடர்கிறது. CSK-ன் சொதப்பலுக்கு காரணம் என்ன?