News April 25, 2025
இந்துக்கள் அதை செய்யவே மாட்டார்கள்: மோகன் பகவத்

தற்போது நடப்பது தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையிலான சண்டை என பஹல்காம் தாக்குதல் குறித்து RSS தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்துள்ளார். இப்போது நடக்கும் சண்டை மதங்களுக்கு இடையிலானது அல்ல எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், நம் மக்கள் யாரும் எதிராளியின் மதத்தை கேட்டு கொன்றதில்லை எனவும், இந்துக்கள் ஒருபோதும் அதை செய்ய மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 16, 2026
BREAKING: முதல்வர் ஸ்டாலினின் 4 புதிய வாக்குறுதிகள்

திருவள்ளுவர் தினமான இன்று, தமிழக மக்களுக்கு 4 புதிய வாக்குறுதிகளை அளிப்பதாக CM ஸ்டாலின் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். *சமூக அநீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் துணிச்சல். *வறியோர் எளியோர் வாழ்வுயுர மனிதநேயத் திட்டங்கள். *இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள். *தொழில் வளர்ச்சிக்கும், மகளிர் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் ஆக்கப் பணிகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
News January 16, 2026
நாட்டின் வணிக தலைநகரை கைப்பற்றுவது யார்?

மகாராஷ்டிராவில் நேற்று மும்பை உள்பட 29 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை 10 மணி முதல் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நேற்று நடந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக உத்தவ் தாக்கரே குற்றஞ்சாட்டிய நிலையில், பாஜக தலைமையிலான <<18868876>>மகாயுதி கூட்டணியே<<>> பெரும்பாலான இடங்களில் வெல்லும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
News January 16, 2026
மாட்டுப்பொங்கல் கோ பூஜை செய்வது எப்படி?

பசுவில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வாசம் செய்வதாக ஐதீகம். கோ வழிபாடு மிகச்சிறப்பு வாய்ந்த ஒன்று. பசு மீது பன்னீர் தெளித்து மஞ்சள், குங்குமம் பொட்டு வைக்க வேண்டும். மாலை அணிவித்து அகத்திக்கீரை, சர்க்கரைப் பொங்கல், பழ வகைகள் ஆகாரமாகத் தர வேண்டும். நெய்விளக்கில் ஆரத்தி எடுக்க வேண்டும். கோபூஜை செய்வதால் பணக்கஷ்டம் நீங்கி, குழந்தை பாக்கியம் உண்டாகும், நீண்ட கால மனக்குறைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.


