News March 27, 2025
தமிழக வானிலை அறிவிப்பில் இந்தி சேர்ப்பு!

TNல் இதுவரை தமிழ், ஆங்கிலத்தில் மட்டும் வெளிவந்த வானிலை அறிக்கை, தற்போது இந்தி மொழியிலும் வெளியாகியுள்ளது, விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் இந்தியா முழுவதும் பிராந்திய மொழி, ஆங்கில மொழியில் வானிலை அறிக்கை வெளிவரும் நிலையில், TNல் மட்டும் இந்தி மொழியுடன் சேர்த்து வெளியாகி உள்ளது. ஏற்கெனவே, இங்கு இருமொழிக் கொள்கை சர்ச்சை நிலவி வரும் நிலையில், இந்தி மொழி சேர்க்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News September 18, 2025
போலி வாக்காளர்கள்: மீண்டும் குண்டை தூக்கிப்போட்ட ராகுல்

மகாராஷ்டிராவின் ராஜுராவில் போலியாக 6,850 வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அதில், பாதி பேரின் முகவரியில் ‘Sasti, Sasti’ என இருப்பதாக தெரிவித்த அவர், கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியிலும் 6,018 வாக்காளர்களை நீக்கும்படி போலி விண்ணப்பங்கள் வந்ததாகவும் கூறியுள்ளார். ஆலந்த் தொகுதி தற்போது காங்., இடமும், ராஜுரா தொகுதி பாஜகவிடமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
News September 18, 2025
நாங்க ரெடி.. பாகிஸ்தான் கேப்டன் சவால்!

ஆசிய கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் மீண்டும் சூப்பர் 4 சுற்றில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ரசிகர்களுக்கு இதுதொடர்பாக ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி, நாங்க சவாலுக்கும் தயார் என்று குறிப்பிட்டுள்ளார். அவர், “கடந்த 4 மாதங்களில் விளையாடியதை போல விளையாடினால், எந்த அணியையும் வெல்ல முடியும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த மேட்ச்சில் யார் ஜெயிப்பாங்க?
News September 18, 2025
தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வாரம் கெடு: ராகுல் காந்தி

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கத்துக்கு ஒரு கும்பல் திட்டமிட்டு விண்ணப்பித்து வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். முக்கியமாக பட்டியலினத்தவர், பழங்குடியினர் வாக்குகள் குறிவைத்து நீக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். தனது குற்றச்சாட்டுக்கு 100% ஆதாரம் இருப்பதாக தெரிவித்த ராகுல் காந்தி, ஒரு வாரத்தில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் எனவும் கெடு விதித்துள்ளார்.