News March 27, 2025
தமிழக வானிலை அறிவிப்பில் இந்தி சேர்ப்பு!

TNல் இதுவரை தமிழ், ஆங்கிலத்தில் மட்டும் வெளிவந்த வானிலை அறிக்கை, தற்போது இந்தி மொழியிலும் வெளியாகியுள்ளது, விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் இந்தியா முழுவதும் பிராந்திய மொழி, ஆங்கில மொழியில் வானிலை அறிக்கை வெளிவரும் நிலையில், TNல் மட்டும் இந்தி மொழியுடன் சேர்த்து வெளியாகி உள்ளது. ஏற்கெனவே, இங்கு இருமொழிக் கொள்கை சர்ச்சை நிலவி வரும் நிலையில், இந்தி மொழி சேர்க்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 1, 2025
கரையான் போல ADMK-வை அரிக்கிறார் EPS: சேகர்பாபு

செங்கோட்டையன் நீக்கம் குறித்து பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு, அதி தீவிரமான, அற்புதமான ராஜதந்திர நடவடிக்கைகளால், கரையான் புற்றை அரிப்பது போல, அதிமுகவை EPS அரித்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். EPS பாஜகவை வலுவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர், EPS-ன் நடவடிக்கைகளால் திமுகவின் பலம் தான் அதிகமாகிறது என்றும் தெரிவித்தார்.
News November 1, 2025
₹44,900 சம்பளம்.. மத்திய அரசில் 258 காலியிடங்கள்!

உளவுத்துறையில் காலியாக உள்ள 258 Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
✦வயது: 18- 27 ✦கல்வித்தகுதி: கம்ப்யூட்டர் தொடர்பான இன்ஜினியரிங் டிகிரி ✦சம்பளம்: ₹44,900 ✦விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 16 ✦முழு தகவலுக்கு <
News November 1, 2025
தமிழக மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்கணும்: SPK

பிஹார் மக்கள் துன்புறுத்தப்படுவதாக பொய்யான தகவலை பரப்பிய மோடி, தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என செல்வப்பெருந்தகை (SPK) வலியுறுத்தியுள்ளார். தேர்தல் லாபத்துக்காக தமிழக மக்களை பழித்துக் கூறுவது ஜனநாயகத்துக்கு எதிரானது; தமிழர்கள் உழைப்பும் அறிவும் இணைந்த மக்களாக உலகம் முழுவதும் மரியாதை பெற்றவர்கள்; அப்படி இருக்கையில் தமிழர்கள் மீதான அவதூறு கருத்தை மோடி திரும்ப பெற வேண்டும் என்றார்.


