News July 5, 2025
பொன்முடிக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் எச்சரிக்கை

பொன்முடிக்கு எதிரான வழக்கில் புலன் விசாரணை செய்ய போலீசார் தயங்கினால், சிபிஐ-க்கு மாற்றப்படும் என்று ஐகோர்ட் எச்சரித்துள்ளது. பெண்கள் & சைவ – வைணவ சமயங்கள் குறித்து பொன்முடி சர்ச்சையாக பேசியது தொடர்பாக தமிழகம் முழுவதும் 112 புகார்கள் அளிக்கப்பட்டது. ஆனால், அவற்றின் மீதான புலன் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதற்கு கண்டனம் தெரிவித்த ஐகோர்ட், விசாரணையை தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News July 5, 2025
சஞ்சு சாம்சனுக்கு டிமாண்ட்? KCL ஏலத்தில் அதிர்ச்சி

கேரளா கிரிக்கெட் லீக் சீசன் 2, ஆக.21 – செப்.6 வரை நடைபெறவுள்ளது. 6 அணிகள் இந்த டி20 தொடரில் பங்கேற்கின்றன. இந்நிலையில், இதற்கான ஏலம் இன்று நடைபெற்று வருகிறது. இதில், சஞ்சு சாம்சனை ₹26.8 லட்சத்துக்கு கொச்சி புளூ டைகர்ஸ் அணி வாங்கியுள்ளது. ஆனால் இந்த ஏலத்தில் ஒரு அணி ₹50 லட்சம் மட்டுமே செலவிட முடியும். இதன் மூலம் பாதிக்கு மேலான ஏல செலவினத் தொகையில் சஞ்சு எடுக்கப்பட்டுள்ளார்.
News July 5, 2025
மயக்கமடைந்த ஏர் இந்தியா பைலட்: பதறிய பயணிகள்!

பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு புறப்பட தயாராக இருந்த ஏர் இந்தியா- AI2414 விமானத்தின் பைலட் திடீரென மயக்கமடைந்ததால், பதற்றம் ஏற்பட்டது. பைலட் உடனடியாக ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவர் தற்போது சிகிச்சையில் உள்ளார். பைலட் இல்லாததையடுத்து Co-pilot விமானத்தை இயக்கினார். இந்த பதற்றத்தின் காரணமாக, விமானம் சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
News July 5, 2025
பரிதாபமான நிலையில் திமுக: இபிஎஸ்

வீடு வீடாக போய் உறுப்பினரை சேர்க்கும் அளவுக்கு திமுக பரிதாபமான நிலைக்கு போய்விட்டது என்று இபிஎஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். மக்கள் தாங்களாகவே விருப்பப்பட்டு கட்சியில் சேர வேண்டுமே தவிர கட்டாயப்படுத்தக் கூடாது எனக் கூறிய அவர், திமுகவில் சேருங்கள் என வீடு வீடாக போய் கேட்கும் அளவுக்கு திமுக வந்துவிட்டது. இதுவே அதிமுகவுக்கு மிகப்பெரிய வெற்றி தான் என்று தெரிவித்தார்.