News June 14, 2024
ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

பக்ரீத் பண்டிகை அன்று பொது இடத்தில் ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. பக்ரீத் பண்டிகையின்போது ஆடு, மாடுகளை மாநகராட்சி அனுமதிக்காத இடத்தில் பலியிட தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆடு, மாடுகளை பலியிடும் சமூகத்தினரின் வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர்.
Similar News
News April 6, 2026
ஜவுளித் துறையையும் விட்டு வைக்காத ஈரான் போர்!

போர் சூழல் காரணமாக வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளிகள் மிகப்பெரிய அளவில் தேக்கம் அடைந்துள்ளன. இதையடுத்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று முதல் 50% உற்பத்தியை குறைக்க ஜவுளி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். நூல் விலை ஏற்றமும் உற்பத்தியை குறைப்பதற்கான காரணங்களில் ஒன்று என அவர்கள் கவலை தெரிவித்தனர்.
News April 6, 2026
BREAKING: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசி நாளான இன்று மட்டும் 2,000 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும். மனுக்களை திரும்பப் பெற ஏப்.9-ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.
News April 6, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹1,440 உயர்வு!

காலையில் சவரனுக்கு ₹1,120 குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த 22 கேரட் <<19578408>>தங்கம் விலை<<>>, பிற்பகலில் ₹1,440 அதிகரித்து நடுத்தர மக்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. சென்னையில் தற்போது 1 கிராம் ₹180 அதிகரித்து ₹13,990-க்கும், 1 சவரன் ₹1,11,920-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மார்ச் மாதத்தில் பெரும் சரிவை சந்தித்த தங்கம் விலை, ஏப்ரல் தொடங்கியதில் இருந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


