News February 17, 2025

தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

image

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறையினர் எடுத்த நடவடிக்கைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. புகார் தொடர்பான காவல்துறையின் துரித நடவடிக்கை மற்றும் டிஐஜி அந்தஸ்தில் இருக்கக்கூடிய அதிகாரியை தற்காலிக பணிநீக்கம் செய்தது உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு நீதிமன்றம் பாராட்டியுள்ளது. மாணவி விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படும் எனவும் நீதிபதிகள் உறுதியளித்துள்ளனர்.

Similar News

News November 5, 2025

இன்று 7 மாவட்டங்களில் கனமழை பொழியும்

image

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பொழியும் என IMD கணித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் வெளியே செல்லும் போது குடையை எடுத்துக் கொள்ளவும்.

News November 5, 2025

Sports Roundup: போதை பொருளுக்கு அடிமையான வீரர்

image

*தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ODI-ல் பாகிஸ்தான் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி. *ரஞ்சியில் தமிழகம் Vs விதர்பா ஆட்டம் டிராவில் முடிந்தது. *போதைப் பொருளுக்கு அடிமையான ஜிம்பாப்வே வீரர் சீன் வில்லியம்ஸ் அணியில் இருந்து நீக்கம். *பேட்மிண்டன் தரவரிசையில் உன்னதி ஹூடா 28-வது இடத்திற்கு முன்னேற்றம். *பிராங்க்ஃபர்ட் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் மானவ் சுதார் 2-வது சுற்றுக்கு தகுதி.

News November 5, 2025

தீராத பணப் பிரச்னை தீர வெற்றிலை தீப ரகசியம்!

image

மாலை 6 மணிக்கு, நிலை வாசலின் உள்பக்கத்தில், கிழக்கு பார்த்தவாறு ஒரு தட்டின் மேல் மஞ்சள் குங்குமம் தடவிய வெற்றிலையுடன், கொஞ்சம் கற்கண்டுகளை வைக்க வேண்டும். அதன் மேல், மண் அகலில் நெய் ஊற்றி, மஞ்சள் திரி போட்டு, விளக்கு ஏற்றி, ‘மகாலட்சுமி தாயே வருக வருக’ என 27 முறை சொல்லி வழிபட வேண்டும். இது கடன் பிரச்னை, பணப் பிரச்னைகளில் இருந்து விடுபட செய்யும் என நம்பப்படுகிறது. SHARE IT.

error: Content is protected !!