News February 17, 2025

தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

image

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறையினர் எடுத்த நடவடிக்கைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. புகார் தொடர்பான காவல்துறையின் துரித நடவடிக்கை மற்றும் டிஐஜி அந்தஸ்தில் இருக்கக்கூடிய அதிகாரியை தற்காலிக பணிநீக்கம் செய்தது உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு நீதிமன்றம் பாராட்டியுள்ளது. மாணவி விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படும் எனவும் நீதிபதிகள் உறுதியளித்துள்ளனர்.

Similar News

News November 20, 2025

தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று நவ.19 இரவு தென்காசி, , புளியங்குடி சங்கரன்கோவில், ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News November 20, 2025

தேனி மாவட்ட மைய நூலகத்தில் தேசிய நூலக வார விழா

image

தேனி மாவட்ட நூலக ஆணைக் குழு மற்றும் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் இணைந்து மைய நூலகத்தில் 58-வது தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இவ்விழாவின் 6ம் நாள் நிகழ்ச்சியில் இன்று வையைத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் புலவர் ச.ந இளங்குமரன் கலந்து கொண்டு, நூல்களின் முக்கியத்துவங்கள் குறித்தும்,புத்தக வாசிப்பால் அறிவு திறன் மேம்படுவது குறித்து சிறப்புரையாற்றினார்.

News November 20, 2025

உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற உலகின் சிறிய நாடு

image

கரீபிய தீவு நாடான குராசாவ் (Curacao), ‘2026 கால்பந்து உலகக் கோப்பை’க்கு தகுதிபெற்று வரலாறு படைத்துள்ளது. இதன் மக்கள்தொகை வெறும் 1.56 லட்சம் பேர் தான். இதன்மூலம் FIFA உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற உலகின் மிகச்சிறிய நாடானது. கடைசி தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஜமைக்காவுடன் 0-0 என டிரா செய்தவுடன் வீரர்கள் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீரில் மிதந்தனர். உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா எப்போது தகுதிபெறும்?

error: Content is protected !!