News December 28, 2024
மாணவிக்கு ₹25 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட் ஆணை

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலை. மாணவியின் FIR வெளியானதால் ₹25 லட்சம் இழப்பீடு வழங்க, TN அரசுக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மாண்பைப் பாதுகாக்கும் வகையில் FIR எழுதப்பட வேண்டும் என அறிவுறுத்திய ஐகோர்ட், மாணவியிடம் எந்த வகையான கல்விக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது எனவும், அவர் தொடர்ந்து படிக்கத் தேவையான அனைத்து வசதிகளை ஏற்பாடு செய்யவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
Similar News
News July 9, 2025
மகாராஷ்டிராவை போன்று பிஹாரிலும் பாஜக சதி: ராகுல்

ECI உதவியோடு மகாராஷ்டிராவை போன்று பிஹார் தேர்தலிலும் முறைகேடு செய்ய பாஜக சதி செய்வதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். அம்மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை ECI மேற்கொண்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய அவர், ஏழை வாக்காளர்களை Voter List-ல் இருந்து நீக்க வாய்ப்புள்ளது என்றார்.
News July 9, 2025
₹10 யாசகம் போட்ட பெண்.. ரஜினிகாந்த் பேச்சு வைரல்

தனக்கு பெண் ஒருவர் ₹10 யாசகம் போட்டதாக ரஜினி பேசிய பழைய வீடியோ வைரலாகி வருகிறது. பெங்களூருவில் உள்ள கோயிலுக்கு தாம் மாறு வேடத்தில் சென்று இருந்ததாகவும், அப்போது அங்கு வந்த பெண் தன் உருவத்தை பார்த்து பிச்சை எடுப்பவர் என கருதி ₹10 அளித்ததாகவும், அதை மறுக்காமல் தாம் வாங்கிக் கொண்டதாகவும், பிறகு உண்டியலில் தாம் ₹200 போட்டதை பார்த்து அவர் தன்னிடம் வருத்தம் தெரிவித்தாகவும் கூறியுள்ளார்.
News July 9, 2025
கேட் கீப்பர் தூங்கியதே விபத்துக்கு காரணம்!

கடலூர் செம்மங்குப்பத்தில் நேர்ந்த விபத்துக்கு கேட் கீப்பர் தூங்கியதே காரணம் என்பது தெரியவந்துள்ளது. 7.10 மணிக்கு ரயில் வருவது குறித்து அவருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கேட்டை மூடாமல் மீண்டும் தூங்கியுள்ளார். கேட்டை மூட மறந்துவிட்டதாக பங்கஜ் சர்மா வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். So Sad!