News April 3, 2025

கர்நாடகாவில் பைக் டாக்சிக்கு தடை விதிக்க ஐகோர்ட் உத்தரவு

image

கர்நாடகாவில் 6 வாரங்களுக்குள் ரேபிடோ, ஊபர் உள்ளிட்ட நிறுவனங்களின் பைக் டாக்சி சேவைக்கு தடை விதிக்க அந்த மாநில ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பைக் டாக்சி இயக்குதலுக்கான தனி விதிகள், வழிகாட்டுதல்களை உருவாக்கவும் கர்நாடக அரசுக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. அதேபோல், பைக் டாக்சிக்கான உரிய சட்டங்கள் வரும்வரை பைக்குகளை வணிக போக்குவரத்து வாகனமாக இயக்க அனுமதி வழங்க உத்தரவிட முடியாது எனவும் கூறியுள்ளது.

Similar News

News December 9, 2025

புதுச்சேரி: பேருந்துகளில் திருடிய பெண் கைது

image

கோரிமேடு சிறப்பு நிலை உதவி ஆய்வாளர் ராஜீ தலைமையில், வடக்கு குற்றப்பிரிவு காவலர்கள் மற்றும் தன்வந்திரி காவல் நிலைய குற்றப்பிரிவு காவலர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் நீண்ட தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இதில் பேருந்துகளில் திருடிய தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சேர்ந்த சின்னத்தாய் என்ற பெண்னை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.3.5 லட்சம் பணம் மற்றும் சுமார் 6 பவுன் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

News December 9, 2025

விஜய் புறப்பட்டார்..

image

புதுச்சேரியில் நடக்கவுள்ள தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க நீலாங்கரை வீட்டில் இருந்து விஜய் புறப்பட்டார். உப்பளம் துறைமுக மைதானத்தில் நடக்கவுள்ள இக்கூட்டம் 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் பங்கேற்க 5 ஆயிரம் பேருக்கு QR code உடன் அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கரூர் சம்பவத்தை அடுத்து 73 நாள்களுக்கு பிறகு இன்று தனது பரப்புரை வாகனத்தில் நின்று விஜய் பிரசாரம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News December 9, 2025

வந்தே மாதரம்: PM மோடி Vs பிரியங்கா காந்தி

image

லோக்சபாவில் <<18503037>>வந்தே மாதரம்<<>> குறித்த விவாதத்தின் போது, முஸ்லிம் லீக்கின் அழுத்தத்தால் பாடலின் சில பாகங்களை நேரு நீக்கியதாக, PM மோடி கூறியிருந்தார். இதை மறுத்து பேசிய பிரியங்கா காந்தி, ‘உண்மையான வரலாற்றை புரிந்து கொள்ளுங்கள். ரவீந்திரநாத் தாகூரின் ஆலோசனையின்படியே பாடல் வரிகள் நீக்கப்பட்டன’ என்று குறிப்பிட்டார். மேலும், மே.வங்க தேர்தலை குறிவைத்தே, வந்தே மாதரத்தை விவாத பொருளாக்குவதாகவும் விமர்சித்தார்.

error: Content is protected !!