News April 3, 2025
கர்நாடகாவில் பைக் டாக்சிக்கு தடை விதிக்க ஐகோர்ட் உத்தரவு

கர்நாடகாவில் 6 வாரங்களுக்குள் ரேபிடோ, ஊபர் உள்ளிட்ட நிறுவனங்களின் பைக் டாக்சி சேவைக்கு தடை விதிக்க அந்த மாநில ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பைக் டாக்சி இயக்குதலுக்கான தனி விதிகள், வழிகாட்டுதல்களை உருவாக்கவும் கர்நாடக அரசுக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. அதேபோல், பைக் டாக்சிக்கான உரிய சட்டங்கள் வரும்வரை பைக்குகளை வணிக போக்குவரத்து வாகனமாக இயக்க அனுமதி வழங்க உத்தரவிட முடியாது எனவும் கூறியுள்ளது.
Similar News
News November 25, 2025
தீவிர பயிற்சியில் ஹிட்மேன் ரோஹித்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ODI தொடருக்கு தயாராகும் விதமாக ஹிட்மேன் ரோஹித் சர்மா பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். பெங்களூருவில் கடந்த 5-6 நாள்களாக முகாமிட்டுள்ள ரோஹித், Nets-ல் நீண்ட நேரம் சுழல், வேகப்பந்துவீச்சை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. மேலும், உடற்தகுதியை மேம்படுத்துவதற்காக ஜிம்மில் பயிற்சி செய்து 3 கிலோ எடையை குறைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
News November 25, 2025
மருத்துவத்தில் இந்தியாதான் பெஸ்ட்.. ஏன் தெரியுமா?

மருத்துவ சேவையில் இந்தியா உலகளவில் சிறந்து விளங்குகிறது. அமெரிக்காவை ஒப்பிடுகையில் சிகிச்சைகள் விரைவாகவும், மலிவாகவும் கிடைக்கின்றன. இதில், வியப்பான தகவல் என்னெவென்றால், அமெரிக்காவை விட இந்தியாவில் குறைவான மருத்துவர்களே உள்ளனர். அமெரிக்காவை விட இந்தியாவில் குறைந்த செலவில் செய்ய முடியும் சில சிகிச்சைகளை மேலே, போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 25, 2025
தலைமை சொன்னால் CM ஆக தொடர்வேன்: சித்தராமையா

கர்நாடகாவில் <<18373166>>உள்கட்சி பூசல்<<>> உச்சத்தை எட்டியுள்ள நிலையில், கட்சி தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என சித்தராமையா தெரிவித்துள்ளார். டிகே சிவகுமாரும் தலைமையின் முடிவுக்கு கட்டாயம் கட்டுப்பட வேண்டும் என்று கூறியுள்ள அவர், நான் முதல்வராக தொடர வேண்டும் என்று தலைமை முடிவெடுத்தால், தொடர்வேன் என்று குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டில் இருந்து ராகுல் வந்த பிறகு, இதுபற்றி முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.


