News April 24, 2024
அமலாக்கத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ரயிலில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதன் விசாரணையில், தேர்தலின்போது பணம் பறிமுதல் செய்தது பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் வராது என அமலாக்கத்துறை கூறியது. இதையடுத்து, ஏப்.24க்குள் அமலாக்கத்துறை உரிய பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Similar News
News January 3, 2026
அதிகரிக்கும் ஒயிட் காலர் பயங்கரவாதம்: ராஜ்நாத் சிங்

இந்தியாவில் ‘ஒயிட் காலர்’ பயங்கரவாதம் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயம் என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை சுட்டிக்காட்டி, நன்கு படித்தவர்கள் கூட தேசத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். கல்வி கற்பதன் நோக்கம் என்பது தொழில்முறை வெற்றியை பெறுவதற்கு மட்டுமல்ல, ஒழுக்கம் மற்றும் பண்புகளை வளர்த்துக்கொள்வதை சேர்த்துதான் என்று அவர் குறிப்பிட்டார்.
News January 3, 2026
இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டும் பிசிசிஐ

டிட்வா புயலால் கடுமையாக பாதிப்படைந்த இலங்கைக்கு உதவ BCCI முன்வந்துள்ளது. இந்தாண்டு ஆகஸ்டில் இந்தியா, இலங்கை இடையே 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஏற்று, கூடுதலாக டி20 தொடரிலும் விளையாட BCCI ஒப்புக்கொண்டுள்ளது. இந்த தொடரில் கிடைக்கும் பணம் முழுவதும், நிவாரணப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
News January 3, 2026
ஜனவரி 3: வரலாற்றில் இன்று

*1760–வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்
*1831–சமூக செயல்பாட்டாளர் சாவித்ரிபாய் புலே பிறந்தநாள்
*1957–முதலாவது மின்கடிகாரம் அறிமுகம்
*1966–இந்திய வீரர் சேத்தன் சர்மா பிறந்தநாள்
*1972–நாடகாசிரியர் பொ.வே.சோமசுந்தரனார் நினைவுநாள்
*1989–பாடகி சைந்தவி பிறந்தநாள்
*1993–நடிகை நிக்கி கல்ரானி பிறந்தநாள்
*2002–விஞ்ஞானி சதீஷ் தவான் நினைவுநாள்


