News April 24, 2025
ஹய்யா ஜாலி.. இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை!

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது. அதேபோல், 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஏப். 17 முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று மதியத்துடன் இறுதித் தேர்வு நிறைவடைகிறது. அதன்பின்னர், அவர்களுக்கும் விடுமுறைதான். கோடை விடுமுறை நிறைவடைந்து ஜுன் 2-ம் தேதி பள்ளிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமே ஜாலிதான்!
Similar News
News April 24, 2025
பிரபல நடிகர் டேமியன் ஸ்டோன் காலமானார்

பிரபல ஹாலிவுட் நடிகரும், பாடி பில்டருமான டேமியன் ஸ்டோன் (32) உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மால்டோவில் பிறந்த இவர், தனது நேர்த்தியான நடிப்பு, உடலமைப்பால் பலரையும் கவர்ந்தார். தன்பாலின ஈர்ப்பாளராக அறியப்பட்ட இவர், சில ஆபாச படங்களிலும் நடித்துள்ளார். USA-வின் பென்சில்வேனியாவில் வசித்து வந்த இவர் 3 முறை பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #RIPDamienStone
News April 24, 2025
ஓபிஎஸ்சுடன் சீமான் திடீர் சந்திப்பு.. கூட்டணியா?

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-சை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் ஓபிஎஸ், அவரின் 2 மகன்களை நேற்று சீமான் சந்தித்துப் பேசினார். எதற்காக 3 பேரையும் அவர் திடீரென சந்தித்தார் என்றத் தகவல் இல்லை. இதுகுறித்து பேட்டியளித்துள்ள சீமான், கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்று கூறியுள்ளார்.
News April 24, 2025
நயன்தாராவுடன் மோதலா?.. சுந்தர்.சி ஓபன் டாக்!

‘மூக்குத்தி அம்மன் 2’ படப்பிடிப்பின்போது நயன்தாராவுடன் மோதல் என பரவிய செய்திக்கு படத்தின் இயக்குநர் சுந்தர்.சி பதிலளித்துள்ளார். நயன்தாரா மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் நடிகை எனக் குறிப்பிட்ட சுந்தர்.சி, தனக்கும் அவருக்கும் எந்த பிரச்னையும் இல்லை என விளக்கமளித்துள்ளார். இதுபோன்று வெளியாகும் கிசுகிசுகளுக்கெல்லாம் பதில் அளித்துக் கொண்டிருக்க முடியாது என்றும் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.